யங்கரவாதம் என்றால் என்ன? ஆளும் வர்க்கம் தனக்கு எதிரான எல்லாவற்றையும் பயங்கரவாதம் என்ற ஒற்றை வாதத்தில் அடக்கி ஒடுக்கும் தந்திரத்தை செயல்படுத்தி வருகிறது. இன்னொரு பக்கம் பார்ப்பனிய பயங்கரவாதம் ஆளும் வர்க்கமாக இருந்து கொண்டே தனது இருப்பை நியாயப்படுத்தும் தேவைக்காக தனது வர்க்க நலன்களுக்கு நேரெதிரானவர்களையும், மத சிறுபான்மையினரையும் பயங்கராவாதிகள் என்று முத்திரை குத்தி பீதி கிளப்புவதன் மூலமே தனது மக்கள் விரோத பயங்கரவாத நடவடிக்கைகளை மக்களின் பார்வையிலிருந்து பாதுகாத்து வருகிறது.

இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழல் உருவாக்கும் சமூக பொருளாதார அழுத்தம் என்பது அதன் உண்மையான வடிவங்களில் வெளி வருவது என்பது ஆளும் வர்க்கங்களுக்கு என்றுமே ஆபத்தானதுதான். அப்படியே எங்கேனும் வந்தால் கூட அவற்றையும் பயங்கரவாத முத்திரை குத்தி வெகு சன அரங்கில் தனிமைப்படுத்தி முறியடிக்கும் தேவை தரகு வர்க்கத்துக்கு உள்ளது(Nandigram, etc).

வரைமுறையின்றி இந்தியாவின் வளங்களை கூட்டிக் கொடுக்கும் தரகு வர்க்க அரசியல்வாதிகளும், அதற்க்கு தரகு வேலை செய்யும் பார்ப்ப்னிய பயங்கரவாதிகளும் தமது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள தொடர்ந்து ஒரு போலியான எதிரியை உருவாக்கும் தேவை உள்ளது.

பார்ப்பனியத்தின் நலனும், ஏகாதிபத்தியத்தின் நலனும் ஒரு சில சொற்பமான விசயங்களைத் தவிர்த்து வேறு எங்கும் முரன்படவில்லை. ஆனால் இவர்கள் இருவரின் நலனும் ஒன்றிணையும் புள்ளிகள் பல உள்ளன. தொடர்ந்து பயங்கரவாத பீதியூட்டுவதன் மூலம் தமது பாசிச செயல்பாடுகளையே நியாயமானது என்ற பொதுக்கருத்தை வலுப்பெறச் செய்யும் தேவை இருவருக்கும் உள்ளது.

ஏகாதிபத்தியத்தின் தேவைக்குட்பட்டு பார்ப்பனியம் இங்கு இருக்கும் அதே வேளையில் உபரியாக பார்ப்ப்னியத்தின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்குபவர்களுக்கு எதிராகவும் இந்த பாசிச சூழலை பயன்படுத்தும் சலுகையை ஏகாதிபத்தியம் பார்ப்ப்னியத்திற்க்கு உறுதிப்படுத்துகிறது.

அதே நேரத்தில் இந்திய பாசிசமான பார்ப்பனியத்தின் சித்தாந்த அடிப்படை என்பதே ஏகாதிபத்தியத்தின் சமூக பொருளாதார சுரண்டல் வடிவத்துக்கு சேவை செய்வதாக உள்ளதும் இவர்களின் சகோதரத்துவ உறவுக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

இந்த சூழலில், ஏகாதிபத்தியத்திற்க்கு சேவை செய்யும் எந்தவொரு வோட்டுக் கட்சிகளும் தவிர்க்க இயலாமல் பார்ப்பனிய நடைமுறைகளை தமது செயல்பாடுகளாக கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதன் அளவு வேண்டுமானால் வோட்டுக் கட்சிக்கு வோட்டு கட்சி மாறுபடலாம். ஆனால் பார்ப்பனியம் இன்றி ஏகாதிபத்திய சேவை இந்தியாவில் செய்ய இயலாது என்பதுதான் உண்மை.

மேலும் பார்ப்பனியம் தனது நலன்களை மட்டும் முன்னிறுத்தும் சில பத்து அமைப்புகளை கொண்டுள்ளதோடல்லாமல். தனது தேவைக்காக பிற மத, இன, சாதி ஆட்களையும் சேவை செய்ய வைக்கும் இயல்புடன் எல்லா வகை அமைப்பு வடிவங்களிலும் ஊடுருவி நிற்கிறது. சில ஆயிரம் வருடங்கள் ஆட்சியிலிருந்த பார்ப்பனியம் சமூகத்தின் அனைத்து விழுமியங்களிலும் தனது இருப்பை காட்டிக் கொள்வது ஆச்சரியமான விசயமல்ல. இதனை நேரடியாக பார்ப்பனிய கட்சிகளில் இல்லாமலேயே பார்ப்பனிய சேவை செய்யும் பிற வோட்டுக் கட்சி பயங்கரவாதிகள் அதீதமாக காணக் கிடைப்பதைக் கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம்.

இதே நிலைதான் ஊடகங்களிலும் நிலவிவருகிறது. ஊடகங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியம் பார்ப்ப்னியம் என்ற இந்த கூட்டணியின் நீட்சியாகவே இருக்கின்றன. இவையணைத்தும் சொல்லி வைத்தது போல ஒரே மாதிரி பிரச்சாரம் செய்யும் அளவு அதன் நிர்வாக இடங்களில் RSS ஆட்கள் உட்கார்ந்துள்ளனர்.

இந்நிலையில் பின்வாங்கியதாக பரவசவாத குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவிகளால கருதப்பட்ட பார்ப்பனியம் இன்னும் வெளிப்படையாக தனது பாசிச நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொணடு பொது அரங்கில் வெளிகாட்டி வருகிறது. இன்னொரு பக்கம் மறுகாலனிய நடவடிக்கைகளும் மிக வேகமாக ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை வேகம் பெறுகின்றன என்ற உண்மை நமக்கு நேர்மறையாக சொல்லும் விசயம் என்னவென்றால், இதற்கெதிரான மக்களின் போராட்டங்களும் வேகம் பெரும் என்பதைத்தான்.

எதிர்மறையாக நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், இவர்களின் பாசிச நடவடிக்கைகளும் வீரியம் பெற இருக்கின்றன என்பதே ஆகும். இவர்களின் பய பீதியூட்டும் கோயபல்ஸ் பிரச்சாரம் வேகம் பிடிக்கப் போகின்றன என்பதே ஆகும். பய பீதியூட்டவும், போலி எதிரியை உருவாக்கவும் தேவையான சம்பவங்கள் இனி தொடர்ந்து அடிக்கடி உற்பத்தி செய்யப்படும் என்பதே ஆகும்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் போடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரும் முயற்சி நடந்தேறி வருகிறது. எந்த வகையிலும் வோட்டுக் கட்சிகள் இவர்களின்(ஏகாதிபத்தியம், பார்ப்பனியம்) நலனுக்கு ஊறானவர்கள் இல்லை என்பதால் போடா சட்டத்தில் வோட்டுக் கட்சிகளுக்கு மட்டும் விலக்கு கொடுக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் போடா சட்டம் தனது உண்மையான இலக்காகிய ஜனநாயக, புரட்சிகர சக்திகளுக்கு எதிராக மட்டும் வேலை செய்வதை உறுதிப்படுத்துவதுடன், அதற்க்கு எல்லா பிழைப்புவாதிகளின் ஆதரவையும் உறுதிப்படுத்த இருக்கின்றன பாசிச சக்திகள்.

இந்நிலையில் ஒவ்வொரு ஜனநாயகவாதியின் கடமையாக பார்ப்பனியத்தின் முழு வடிவத்தையும் (அதன் வர்க்க சார்பு, வர்ண சார்பு, சித்தாந்த பின்புலம்) புரிந்து கொண்டு அதற்கெதிரான கருத்து பிரச்சாரத்தை, அதன் ஆணி வேரை தகர்த்தெறியும் வகையில் செய்ய வேண்டிய மிக மிக முக்கியமாக உள்ளது. மாற்று ஊடகங்களை கட்டியமைப்பதின் மூலம் இந்த் உண்மையான அதி பயங்கர பயங்கரவாதம் குறித்து வெகு சனங்களிடம் கொண்டு செல்லும் கடமை வேறு எப்போதையும் விட இன்று மிக முக்கியமானதாக முன் வந்துள்ளது.

எந்தவொரு ஊசலாட்டத்திற்கும் இடமின்றி கறாராக ஏகாதிபத்தியம்-பார்ப்பனியம் கூட்டணிக்கும், ஜனநாயக-புரட்சிகர கூட்டணிக்கும் இடையில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் ஒரு வரலாற்று நிர்பந்தம் இதோ ஆரம்பமாகிவிட்டது. எல்லாவித மன சஞ்சலங்களையும் விட்டொழித்து விட்டு சமரசமின்றி சிந்திக்க கோரி ஜனநாயக சக்திகளுக்கு இந்த கட்டுரையின் மூலம் அரைக் கூவி அழைக்கிறேன்.

இந்த அம்சத்தில் செயல்பட வேண்டிய தேவையை முன்னிட்டு முதல் முயற்சியாக இந்தியாவின் பெரிய பயங்கரவாதமாகிய பார்ப்பனியத்தின் பயங்கரவாதத்தையும், அரசு பயங்கரவாதத்தையும் அறிமுகப்படுத்தும் விதமாக இந்த தளத்தில் செய்திகள், விமர்சனக் கட்டுரைகள் இடம்பெறும். இந்த தளத்தில் பங்களிக்க விரும்பும் ஜனநாயக சக்திகள் இந்த பின்வரும் மெயில் ஐடியை தொடர்பு கொள்ளவும் - asuran@inbox.com. அல்லது இந்த பதிவில்(http://terrorinfocus.blogspot.com/) பின்னூட்டமிடவும். தகவல்களை பெயர் வெளியிட விரும்பாமலும் தரலாம். தகவல்களின் நம்பகத்தன்மை உத்திரவாதப்படுத்தப்பட்ட பின்பு வெளியிடப்படும்.

பிற சிறுபான்மை பயங்கரவாத நடவடிக்கைகளை விரிவாக பேசி துவேசம் பரப்ப பாசிஸ்டு ஊடகங்கள் இருக்கின்ற காரணத்தாலும், வேறு வெகுசன முதாலளித்துவ ஊடகங்கள் இந்த அம்சத்தில் விவாதத்தை முன்னெடுத்து சென்று மக்களிடம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி வருவதாலும் அவற்றிற்கு இங்கு முக்கியத்துவம் தேவைப்பட்டால் ஒழிய அளிக்கப்படாது.

Terrorfocus

Showing posts with label அரசு. Show all posts
Showing posts with label அரசு. Show all posts

Friday, June 1, 2007

நீ எங்கள் பக்கம் இல்லையென்றால் பயங்கரவாதிகளின் பக்கம் இருப்பதாக அர்த்தம்

ட்டுப்பாடில்லாத வரை எந்த ஒரு அடக்குமுறை வடிவத்தின் உண்மை முகமும் வெளித் தெரிவதில்லை. எல்லாம் கிடைக்கும் வரை இன்றைய குடும்ப என்கிற அடக்குமுறை வடிவம் கூட மிக இனிமையானதாகவே இருக்கிறது. ஏதாவது ஒரு விசயத்தில் தட்டுப்பாடு ஏற்ப்படும் போது அந்த அடக்குமுறை தனது உண்மை முகத்தை காட்டுகிறது போலியாக கிடைத்து வந்த சலுகைகளும், சுதந்திரமும் பறிக்கப்படுகிறது.

இதே நிலைதான் அரசு என்ற வடிவத்துக்கும். மறுகாலனியச் சூழலில் பிரச்சனைகள் பெருக பெருக மக்கள் ஆங்காங்கே நேரடியாக அரசுடன் யுத்தம் நடத்தி வருகிறார்கள். நேற்றைய காலங்களில் வழங்கப்பட்ட, நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகள் விதந்தோம்பி வரும் சொற்ப ஜனநாயக உரிமைகள் இன்றைய நெருக்கடியான நிலைகளை சமாளிக்க பெருத்த இடைஞ்சலாக அரசின் முன் வந்து நிற்கிறது. அந்த பேயரளவிலான உரிமைகளையும் குப்பைத் தொட்டியில் கடாசுகிறது அரசு.

போலி என்கௌண்டர்கள், மோசடி பேர்வழிகளைப் பற்றி மேடைப் போட்டு பேச தடை, வால் போஸ்டர் ஒட்டினால் தேசத் துரோக சட்டத்தில் கைது, மத நல்லிணக்கம் குறித்து பேசினால் அதற்க்கும் தடை, மக்கள் பிரச்சனைகளுக்கு போராடினால் பதிலுக்கு குண்டாந்தடிகளே வருகின்றன. இப்படி உருமாறி தனது சுயரூபம் காட்டி வரும் மறுகாலனியத்தின் இன்னுமொரு விளைவாக பின்வரும் விசயம் நடந்துள்ளது.

மருத்துவர் பினாயக் சென்(Binayak Sen) என்பவரை அவர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளவர் என்பதாக கூறி கைது செய்துள்ளது போலீஸ். சட்டிஸ்கரில் மிகவும் மதிக்கப்படும் ஒரு ஆளுமை இவர். சட்டிஸ்கரில் அவர் ஒரு முக்கியமான மனித உரிமை போராளி (PUCL), பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து வெளிக் கொண்டுவந்தவர். காவல் நிலைய மரணங்கள், போலி என்கௌண்டர்கள், பட்டினிச் சாவுகள், வயிற்றுப் போக்கு ஊட்டச் சத்து குறைப்பாடு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சனைகளை வெளி உலகின் பார்வைக்கு கொண்டு வந்தவர். சல்வாஜுடம் என்ற பெயரில் சட்டீஸ்கர் அரசு தனது சொந்த மக்கள் மீது ஏவிவிட்டுள்ள அடக்குமுறை போரின் கோர பக்கங்களை (கிராமத்தோடு மக்களை மிரட்டி நிவாரன முகாம்களில் அடைத்து வைப்பது, வீடுகள், நிலங்களை தீயிட்டு கொளுத்துவது முதல் பல்வேறு கொடுமைகள்) வெளிக் கொண்டு வந்ததில் முக்கியமானவர் இவர்.

அவரை கைது செய்த பின் அவருடைய வீட்டை சோதனையிட்ட போலீஸு அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு நோட்டிஸ்கள் சிலவும், மாதன் என்கிற மாவோயிஸ்டு தலைவரிடமிருந்து வந்த ஒரு கடிதமும் எடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் ரய்ப்பூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மாவொயிஸ்டுகளின் படு மோசமான நிலையை எடுத்து கூறி அதற்க்கு PUCL மூலம் இந்த கொடுமைக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறது. அந்த கடித்ததில் அன்பு தோழர் பினாயக் சென் என்று குறிப்பிட்டிருந்ததுதான் பிரச்சனைக்கு காரணமே. இது தவிர்த்து 30 முறை நாராயன் சண்யால் என்ற மாவோயிஸ்ட் தலைவரை சிறையில் சென்று சந்தித்தார் இவர் என்பதுதான் இன்னொரு மிக முக்கிய குற்றச்சாட்டு.

பிரஃபுல் பிட்வய்(praful bidwai) என்பவர் இந்த குற்றச்சாட்டுகள் அடி முட்டாள்தனமானவை என்கிறார். "அரசு அதிகாரிகளின் அனுமதியுடன், ஜெயிலரின் மேற்பார்வையிலேயே சிறையில் இருந்த நாராயனை சந்தித்துள்ளார் சென். சிறையில் இருக்கும் ஒருவரை பார்த்து அவர்து அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவது சென்னிடைய சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒரு செயல்பாடே. அப்படியிருக்க 35 முறை பார்த்தார், 100 முறை பார்த்தார் என்ற கணக்கெல்லாம் அர்த்தமற்றது" என்கிறார்.

அமெரிக்க கோக்கே வெளியேறு என்று வால்போஸ்டர் ஒட்டினாலே தேசத் துரோகம் எனும் போது மாவொயிஸ்டுகள் தோழர் என்று விளித்து எழுதிய கடிதத்தை வைத்திருந்தால் அது உண்மையிலேயெ இந்த அரசின் வரையறைப்படி மரண தண்டனை கொடுக்க தகுந்த தேசத் தூரொகம்தான். அவர்களை சிறையில் சந்தித்தாலோ அதைவிட பெருத்த குற்றம். ஆயினும் 1947க்கு முன்பு நம்மை நேரடியாக ஆட்சி செய்த பிரிட்டிஸ்க்காரன் கூட இந்தளவுக்கு கடுமையாக தனது நலனை பேணிப் பாதுகாக்கவில்லை. அடிவருடி அரசோ தனது அடிமை சேவகத்தை ஓவர் ரியாக்ஸனாக வெளிப்படுத்துகிறது.

பாசிசம் முதலாளித்துவத்தின் உண்மை உருவம். அதுவும் முதலாளித்துவத்தின் உச்ச கட்டமான(கடைசி கட்டமல்ல) ஏகாதிபத்திய காலத்தில் பாசிசம் இன்னும் கோடூரமாக வெளிவருகிறது. 'எந்த ஒரு நாட்டையும் அடிமைப்படுத்தியுள்ள நாடு தன்னளவில் சுதந்திரமானதாக இருக்காது'. இந்த உண்மையும் வேறெந்த காலத்தையும் விட இன்றைய மறுகாலனியாதிக்க சூழலில் பேருண்மையாய் வெளி வருகிறது. ஏகாதிபத்திய நாடுகள் இந்தியா போன்ற நாடுகளில் தமது சுரண்டலை அதிகப்படுத்த அதிகப்படுத்த தமது சொந்த நாடுகளின் அவை வழங்கி வந்த ஜனநாயக உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வருகின்றன. பதிலுக்கு இந்திய போன்ற நாடுகளோ ஏகாதிபத்திய சுரண்டலை எதிர்க்கும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க வசதியாக ஒவ்வொரு ஜனநாயக உரிமைகளையும் குழி தோண்டி புதைத்து வருகிறார்கள். இன்று இவர் நாளை அடிமைத்தனத்தை எதிர்க்கும் யார் வேண்டுமானாலும்.

அருந்ததிராயின் வார்த்தைகளில் சொல்வதென்றால், "இந்திய ஒரு போலீஸ் ராஜ்யமாக மாற இருக்கிறது. அங்கு நடப்பவற்றை ஏற்றுக் கொள்ளாத ஒவ்வொருவரும் பயங்கரவாதி என்று அழைக்கப்படும் அபாயம் உள்ளது..... பயங்கரவாதம் என்ற சொல்லாடலுக்கு எந்தவொரு தெளிவான விளக்கமும் கொடுக்காமல் விட்டு வைத்திருப்பதன் மூலம் அதன் அர்த்தம் மிகப்பரந்து விரிந்ததாக திட்டமிட்டே விடப்பட்டுள்ளது. நாமும் கூட வெகு விரைவில் மாவோயிஸ்டுகள் என்றோ நக்சலைட்டுகள் என்றோ, பயஙகரவாதிகள், பயங்கரவாதி ஆதரவாளன் என்றோ அழைக்கப்பட்டு முடித்துக்கட்டப்படும் நாள் வெகு தூரத்திலில்லை."

ஒரு அரைக்காலனியாக உள்ள இந்தியாவில் ஜனநாயகம் என்பது படித்த நடுத்தர வர்க்கத்திற்க்காவது கிடைத்து வந்தது. அதுவும் தற்போது தரகு அரசுக்கு பெருத்த இடைஞ்சாலாகி விட்டபடியால் கழட்டியெறியப்பட்டு கிழிந்த கோமணாய் அரைக் கம்பத்தில் தொங்கிறது. போலி சுதந்திர தினத்தன்று பறக்கவிடப்பட்ட மூவர்ணக் கொடியோ அரைக் கோமணத்தின் முடை நாற்றத்தில் மூச்சு திணறி தலை தாழ்ந்துள்ளது.

ஆக, அன்புள்ள வாசக பயங்கரவாதிகளே (பின்ன, தற்போதைய வரையறைப்படி பயங்கரவாதியினுடைய எழுத்துக்களை படிப்பவரும் கூட பயங்கரவாதிதானே) இந்த செய்தியை எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள். இமெயிலில் அனுப்புங்கள். இதுதான் இன்றைய இந்தியா, நாளைய இந்தியா....


TerrorinFocucs

நன்றி: அரசுபால்ராஜ்


Tuesday, May 29, 2007

மதவெறியும், அரசும் இணையும் புள்ளி - மர்கோவாவில் பேச்சுரிமைக்கு தடை

தவெறியும், அரசும் இணையும் புள்ளி - மர்கோவாவில் பேச்சுரிமைக்கு தடை மர்கோவாவில் 'மதவெறியால் இந்தியாவில் மதசார்பற்ற ஜனநாயகத்திற்க்கு ஏற்ப்பட்டுள்ள அபாயம்' என்ற தலைப்பில் நடைபெற இருந்த ஒரு பொதுவிவாதத்திற்க்கு தடை போட்டுள்ளது கோவா போலீசும், துணை நீதிபதி டெரக் நெட்டொ(Derek Neto).

இவர்களின் பேச்சினால் அங்கு மத கலவரம் நிகழும் என்று அறியதொரு கண்டுபிடிப்பை காரணமாக சொல்லியுள்ளார்கள் இவர்கள். தோகாடியாவும், அதவானியும், இன்னபிற சங் பரிவார குரங்குகளும் பல்வேறு பொய்களை பரப்பி இந்தியா முழுவதும் செய்து வரும் கலவரங்களை கண்டு கொள்ளாத இந்த அரசும் நீதிமன்றமும் அதற்கெதிரான விவாதஙகளைக் கூட தடை செய்வதன் மூலம் இவர்கள் உண்மையில் யாருடைய அல்லக்கைகள் என்பதனை மிகத் தெளிவாகவே வெளிப்படுத்துகிறார்கள். ஏகாதிபத்திய சேவை செய்யும் ஒரு அரசு இயந்திரமும், பார்ப்ப்னியம் ஒன்றையொன்று சார்ந்து நின்றே இயங்கும் என்பது சரிதான்.

Talk on communal harmony in Goa stopped

CEC: 'SDM's decision to stop public talk in Goa was wrong'

TerrorinFocus

Monday, May 21, 2007

ஏன் இந்த தளம்?

யங்கரவாதம் என்றால் என்ன? ஆளும் வர்க்கம் தனக்கு எதிரான எல்லாவற்றையும் பயங்கரவாதம் என்ற ஒற்றை வாதத்தில் அடக்கி ஒடுக்கும் தந்திரத்தை செயல்படுத்தி வருகிறது. இன்னொரு பக்கம் பார்ப்பனிய பயங்கரவாதம் ஆளும் வர்க்கமாக இருந்து கொண்டே தனது இருப்பை நியாயப்படுத்தும் தேவைக்காக தனது வர்க்க நலன்களுக்கு நேரெதிரானவர்களையும், மத சிறுபான்மையினரையும் பயங்கராவாதிகள் என்று முத்திரை குத்தி பீதி கிளப்புவதன் மூலமே தனது மக்கள் விரோத பயங்கரவாத நடவடிக்கைகளை மக்களின் பார்வையிலிருந்து பாதுகாத்து வருகிறது.

இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழல் உருவாக்கும் சமூக பொருளாதார அழுத்தம் என்பது அதன் உண்மையான வடிவங்களில் வெளி வருவது என்பது ஆளும் வர்க்கங்களுக்கு என்றுமே ஆபத்தானதுதான். அப்படியே எங்கேனும் வந்தால் கூட அவற்றையும் பயங்கரவாத முத்திரை குத்தி வெகு சன அரங்கில் தனிமைப்படுத்தி முறியடிக்கும் தேவை தரகு வர்க்கத்துக்கு உள்ளது(Nandigram, etc).

வரைமுறையின்றி இந்தியாவின் வளங்களை கூட்டிக் கொடுக்கும் தரகு வர்க்க அரசியல்வாதிகளும், அதற்க்கு தரகு வேலை செய்யும் பார்ப்ப்னிய பயங்கரவாதிகளும் தமது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள தொடர்ந்து ஒரு போலியான எதிரியை உருவாக்கும் தேவை உள்ளது.

பார்ப்பனியத்தின் நலனும், ஏகாதிபத்தியத்தின் நலனும் ஒரு சில சொற்பமான விசயங்களைத் தவிர்த்து வேறு எங்கும் முரன்படவில்லை. ஆனால் இவர்கள் இருவரின் நலனும் ஒன்றிணையும் புள்ளிகள் பல உள்ளன. தொடர்ந்து பயங்கரவாத பீதியூட்டுவதன் மூலம் தமது பாசிச செயல்பாடுகளையே நியாயமானது என்ற பொதுக்கருத்தை வலுப்பெறச் செய்யும் தேவை இருவருக்கும் உள்ளது.

ஏகாதிபத்தியத்தின் தேவைக்குட்பட்டு பார்ப்பனியம் இங்கு இருக்கும் அதே வேளையில் உபரியாக பார்ப்ப்னியத்தின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்குபவர்களுக்கு எதிராகவும் இந்த பாசிச சூழலை பயன்படுத்தும் சலுகையை ஏகாதிபத்தியம் பார்ப்ப்னியத்திற்க்கு உறுதிப்படுத்துகிறது.

அதே நேரத்தில் இந்திய பாசிசமான பார்ப்பனியத்தின் சித்தாந்த அடிப்படை என்பதே ஏகாதிபத்தியத்தின் சமூக பொருளாதார சுரண்டல் வடிவத்துக்கு சேவை செய்வதாக உள்ளதும் இவர்களின் சகோதரத்துவ உறவுக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

இந்த சூழலில், ஏகாதிபத்தியத்திற்க்கு சேவை செய்யும் எந்தவொரு வோட்டுக் கட்சிகளும் தவிர்க்க இயலாமல் பார்ப்பனிய நடைமுறைகளை தமது செயல்பாடுகளாக கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதன் அளவு வேண்டுமானால் வோட்டுக் கட்சிக்கு வோட்டு கட்சி மாறுபடலாம். ஆனால் பார்ப்பனியம் இன்றி ஏகாதிபத்திய சேவை இந்தியாவில் செய்ய இயலாது என்பதுதான் உண்மை.

மேலும் பார்ப்பனியம் தனது நலன்களை மட்டும் முன்னிறுத்தும் சில பத்து அமைப்புகளை கொண்டுள்ளதோடல்லாமல். தனது தேவைக்காக பிற மத, இன, சாதி ஆட்களையும் சேவை செய்ய வைக்கும் இயல்புடன் எல்லா வகை அமைப்பு வடிவங்களிலும் ஊடுருவி நிற்கிறது. சில ஆயிரம் வருடங்கள் ஆட்சியிலிருந்த பார்ப்பனியம் சமூகத்தின் அனைத்து விழுமியங்களிலும் தனது இருப்பை காட்டிக் கொள்வது ஆச்சரியமான விசயமல்ல. இதனை நேரடியாக பார்ப்பனிய கட்சிகளில் இல்லாமலேயே பார்ப்பனிய சேவை செய்யும் பிற வோட்டுக் கட்சி பயங்கரவாதிகள் அதீதமாக காணக் கிடைப்பதைக் கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம்.

இதே நிலைதான் ஊடகங்களிலும் நிலவிவருகிறது. ஊடகங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியம் பார்ப்ப்னியம் என்ற இந்த கூட்டணியின் நீட்சியாகவே இருக்கின்றன. இவையணைத்தும் சொல்லி வைத்தது போல ஒரே மாதிரி பிரச்சாரம் செய்யும் அளவு அதன் நிர்வாக இடங்களில் RSS ஆட்கள் உட்கார்ந்துள்ளனர்.

இந்நிலையில் பின்வாங்கியதாக பரவசவாத குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவிகளால கருதப்பட்ட பார்ப்பனியம் இன்னும் வெளிப்படையாக தனது பாசிச நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொணடு பொது அரங்கில் வெளிகாட்டி வருகிறது. இன்னொரு பக்கம் மறுகாலனிய நடவடிக்கைகளும் மிக வேகமாக ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை வேகம் பெறுகின்றன என்ற உண்மை நமக்கு நேர்மறையாக சொல்லும் விசயம் என்னவென்றால், இதற்கெதிரான மக்களின் போராட்டங்களும் வேகம் பெரும் என்பதைத்தான்.

எதிர்மறையாக நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், இவர்களின் பாசிச நடவடிக்கைகளும் வீரியம் பெற இருக்கின்றன என்பதே ஆகும். இவர்களின் பய பீதியூட்டும் கோயபல்ஸ் பிரச்சாரம் வேகம் பிடிக்கப் போகின்றன என்பதே ஆகும். பய பீதியூட்டவும், போலி எதிரியை உருவாக்கவும் தேவையான சம்பவங்கள் இனி தொடர்ந்து அடிக்கடி உற்பத்தி செய்யப்படும் என்பதே ஆகும்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் போடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரும் முயற்சி நடந்தேறி வருகிறது. எந்த வகையிலும் வோட்டுக் கட்சிகள் இவர்களின்(ஏகாதிபத்தியம், பார்ப்பனியம்) நலனுக்கு ஊறானவர்கள் இல்லை என்பதால் போடா சட்டத்தில் வோட்டுக் கட்சிகளுக்கு மட்டும் விலக்கு கொடுக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் போடா சட்டம் தனது உண்மையான இலக்காகிய ஜனநாயக, புரட்சிகர சக்திகளுக்கு எதிராக மட்டும் வேலை செய்வதை உறுதிப்படுத்துவதுடன், அதற்க்கு எல்லா பிழைப்புவாதிகளின் ஆதரவையும் உறுதிப்படுத்த இருக்கின்றன பாசிச சக்திகள்.

இந்நிலையில் ஒவ்வொரு ஜனநாயகவாதியின் கடமையாக பார்ப்பனியத்தின் முழு வடிவத்தையும் (அதன் வர்க்க சார்பு, வர்ண சார்பு, சித்தாந்த பின்புலம்) புரிந்து கொண்டு அதற்கெதிரான கருத்து பிரச்சாரத்தை, அதன் ஆணி வேரை தகர்த்தெறியும் வகையில் செய்ய வேண்டிய மிக மிக முக்கியமாக உள்ளது. மாற்று ஊடகங்களை கட்டியமைப்பதின் மூலம் இந்த் உண்மையான அதி பயங்கர பயங்கரவாதம் குறித்து வெகு சனங்களிடம் கொண்டு செல்லும் கடமை வேறு எப்போதையும் விட இன்று மிக முக்கியமானதாக முன் வந்துள்ளது.

எந்தவொரு ஊசலாட்டத்திற்கும் இடமின்றி கறாராக ஏகாதிபத்தியம்-பார்ப்பனியம் கூட்டணிக்கும், ஜனநாயக-புரட்சிகர கூட்டணிக்கும் இடையில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் ஒரு வரலாற்று நிர்பந்தம் இதோ ஆரம்பமாகிவிட்டது. எல்லாவித மன சஞ்சலங்களையும் விட்டொழித்து விட்டு சமரசமின்றி சிந்திக்க கோரி ஜனநாயக சக்திகளுக்கு இந்த கட்டுரையின் மூலம் அரைக் கூவி அழைக்கிறேன்.

இந்த அம்சத்தில் செயல்பட வேண்டிய தேவையை முன்னிட்டு முதல் முயற்சியாக இந்தியாவின் பெரிய பயங்கரவாதமாகிய பார்ப்பனியத்தின் பயங்கரவாதத்தையும், அரசு பயங்கரவாதத்தையும் அறிமுகப்படுத்தும் விதமாக இந்த தளத்தில் செய்திகள், விமர்சனக் கட்டுரைகள் இடம்பெறும். இந்த தளத்தில் பங்களிக்க விரும்பும் ஜனநாயக சக்திகள் இந்த பின்வரும் மெயில் ஐடியை தொடர்பு கொள்ளவும் - asuran@inbox.com. அல்லது இந்த பதிவில்(http://terrorinfocus.blogspot.com/) பின்னூட்டமிடவும். தகவல்களை பெயர் வெளியிட விரும்பாமலும் தரலாம். தகவல்களின் நம்பகத்தன்மை உத்திரவாதப்படுத்தப்பட்ட பின்பு வெளியிடப்படும்.

பிற சிறுபான்மை பயங்கரவாத நடவடிக்கைகளை விரிவாக பேசி துவேசம் பரப்ப பாசிஸ்டு ஊடகங்கள் இருக்கின்ற காரணத்தாலும், வேறு வெகுசன முதாலளித்துவ ஊடகங்கள் இந்த அம்சத்தில் விவாதத்தை முன்னெடுத்து சென்று மக்களிடம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி வருவதாலும் அவற்றிற்கு இங்கு முக்கியத்துவம் தேவைப்பட்டால் ஒழிய அளிக்கப்படாது.

Terrorfocus