யங்கரவாதம் என்றால் என்ன? ஆளும் வர்க்கம் தனக்கு எதிரான எல்லாவற்றையும் பயங்கரவாதம் என்ற ஒற்றை வாதத்தில் அடக்கி ஒடுக்கும் தந்திரத்தை செயல்படுத்தி வருகிறது. இன்னொரு பக்கம் பார்ப்பனிய பயங்கரவாதம் ஆளும் வர்க்கமாக இருந்து கொண்டே தனது இருப்பை நியாயப்படுத்தும் தேவைக்காக தனது வர்க்க நலன்களுக்கு நேரெதிரானவர்களையும், மத சிறுபான்மையினரையும் பயங்கராவாதிகள் என்று முத்திரை குத்தி பீதி கிளப்புவதன் மூலமே தனது மக்கள் விரோத பயங்கரவாத நடவடிக்கைகளை மக்களின் பார்வையிலிருந்து பாதுகாத்து வருகிறது.

இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழல் உருவாக்கும் சமூக பொருளாதார அழுத்தம் என்பது அதன் உண்மையான வடிவங்களில் வெளி வருவது என்பது ஆளும் வர்க்கங்களுக்கு என்றுமே ஆபத்தானதுதான். அப்படியே எங்கேனும் வந்தால் கூட அவற்றையும் பயங்கரவாத முத்திரை குத்தி வெகு சன அரங்கில் தனிமைப்படுத்தி முறியடிக்கும் தேவை தரகு வர்க்கத்துக்கு உள்ளது(Nandigram, etc).

வரைமுறையின்றி இந்தியாவின் வளங்களை கூட்டிக் கொடுக்கும் தரகு வர்க்க அரசியல்வாதிகளும், அதற்க்கு தரகு வேலை செய்யும் பார்ப்ப்னிய பயங்கரவாதிகளும் தமது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள தொடர்ந்து ஒரு போலியான எதிரியை உருவாக்கும் தேவை உள்ளது.

பார்ப்பனியத்தின் நலனும், ஏகாதிபத்தியத்தின் நலனும் ஒரு சில சொற்பமான விசயங்களைத் தவிர்த்து வேறு எங்கும் முரன்படவில்லை. ஆனால் இவர்கள் இருவரின் நலனும் ஒன்றிணையும் புள்ளிகள் பல உள்ளன. தொடர்ந்து பயங்கரவாத பீதியூட்டுவதன் மூலம் தமது பாசிச செயல்பாடுகளையே நியாயமானது என்ற பொதுக்கருத்தை வலுப்பெறச் செய்யும் தேவை இருவருக்கும் உள்ளது.

ஏகாதிபத்தியத்தின் தேவைக்குட்பட்டு பார்ப்பனியம் இங்கு இருக்கும் அதே வேளையில் உபரியாக பார்ப்ப்னியத்தின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்குபவர்களுக்கு எதிராகவும் இந்த பாசிச சூழலை பயன்படுத்தும் சலுகையை ஏகாதிபத்தியம் பார்ப்ப்னியத்திற்க்கு உறுதிப்படுத்துகிறது.

அதே நேரத்தில் இந்திய பாசிசமான பார்ப்பனியத்தின் சித்தாந்த அடிப்படை என்பதே ஏகாதிபத்தியத்தின் சமூக பொருளாதார சுரண்டல் வடிவத்துக்கு சேவை செய்வதாக உள்ளதும் இவர்களின் சகோதரத்துவ உறவுக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

இந்த சூழலில், ஏகாதிபத்தியத்திற்க்கு சேவை செய்யும் எந்தவொரு வோட்டுக் கட்சிகளும் தவிர்க்க இயலாமல் பார்ப்பனிய நடைமுறைகளை தமது செயல்பாடுகளாக கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதன் அளவு வேண்டுமானால் வோட்டுக் கட்சிக்கு வோட்டு கட்சி மாறுபடலாம். ஆனால் பார்ப்பனியம் இன்றி ஏகாதிபத்திய சேவை இந்தியாவில் செய்ய இயலாது என்பதுதான் உண்மை.

மேலும் பார்ப்பனியம் தனது நலன்களை மட்டும் முன்னிறுத்தும் சில பத்து அமைப்புகளை கொண்டுள்ளதோடல்லாமல். தனது தேவைக்காக பிற மத, இன, சாதி ஆட்களையும் சேவை செய்ய வைக்கும் இயல்புடன் எல்லா வகை அமைப்பு வடிவங்களிலும் ஊடுருவி நிற்கிறது. சில ஆயிரம் வருடங்கள் ஆட்சியிலிருந்த பார்ப்பனியம் சமூகத்தின் அனைத்து விழுமியங்களிலும் தனது இருப்பை காட்டிக் கொள்வது ஆச்சரியமான விசயமல்ல. இதனை நேரடியாக பார்ப்பனிய கட்சிகளில் இல்லாமலேயே பார்ப்பனிய சேவை செய்யும் பிற வோட்டுக் கட்சி பயங்கரவாதிகள் அதீதமாக காணக் கிடைப்பதைக் கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம்.

இதே நிலைதான் ஊடகங்களிலும் நிலவிவருகிறது. ஊடகங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியம் பார்ப்ப்னியம் என்ற இந்த கூட்டணியின் நீட்சியாகவே இருக்கின்றன. இவையணைத்தும் சொல்லி வைத்தது போல ஒரே மாதிரி பிரச்சாரம் செய்யும் அளவு அதன் நிர்வாக இடங்களில் RSS ஆட்கள் உட்கார்ந்துள்ளனர்.

இந்நிலையில் பின்வாங்கியதாக பரவசவாத குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவிகளால கருதப்பட்ட பார்ப்பனியம் இன்னும் வெளிப்படையாக தனது பாசிச நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொணடு பொது அரங்கில் வெளிகாட்டி வருகிறது. இன்னொரு பக்கம் மறுகாலனிய நடவடிக்கைகளும் மிக வேகமாக ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை வேகம் பெறுகின்றன என்ற உண்மை நமக்கு நேர்மறையாக சொல்லும் விசயம் என்னவென்றால், இதற்கெதிரான மக்களின் போராட்டங்களும் வேகம் பெரும் என்பதைத்தான்.

எதிர்மறையாக நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், இவர்களின் பாசிச நடவடிக்கைகளும் வீரியம் பெற இருக்கின்றன என்பதே ஆகும். இவர்களின் பய பீதியூட்டும் கோயபல்ஸ் பிரச்சாரம் வேகம் பிடிக்கப் போகின்றன என்பதே ஆகும். பய பீதியூட்டவும், போலி எதிரியை உருவாக்கவும் தேவையான சம்பவங்கள் இனி தொடர்ந்து அடிக்கடி உற்பத்தி செய்யப்படும் என்பதே ஆகும்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் போடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரும் முயற்சி நடந்தேறி வருகிறது. எந்த வகையிலும் வோட்டுக் கட்சிகள் இவர்களின்(ஏகாதிபத்தியம், பார்ப்பனியம்) நலனுக்கு ஊறானவர்கள் இல்லை என்பதால் போடா சட்டத்தில் வோட்டுக் கட்சிகளுக்கு மட்டும் விலக்கு கொடுக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் போடா சட்டம் தனது உண்மையான இலக்காகிய ஜனநாயக, புரட்சிகர சக்திகளுக்கு எதிராக மட்டும் வேலை செய்வதை உறுதிப்படுத்துவதுடன், அதற்க்கு எல்லா பிழைப்புவாதிகளின் ஆதரவையும் உறுதிப்படுத்த இருக்கின்றன பாசிச சக்திகள்.

இந்நிலையில் ஒவ்வொரு ஜனநாயகவாதியின் கடமையாக பார்ப்பனியத்தின் முழு வடிவத்தையும் (அதன் வர்க்க சார்பு, வர்ண சார்பு, சித்தாந்த பின்புலம்) புரிந்து கொண்டு அதற்கெதிரான கருத்து பிரச்சாரத்தை, அதன் ஆணி வேரை தகர்த்தெறியும் வகையில் செய்ய வேண்டிய மிக மிக முக்கியமாக உள்ளது. மாற்று ஊடகங்களை கட்டியமைப்பதின் மூலம் இந்த் உண்மையான அதி பயங்கர பயங்கரவாதம் குறித்து வெகு சனங்களிடம் கொண்டு செல்லும் கடமை வேறு எப்போதையும் விட இன்று மிக முக்கியமானதாக முன் வந்துள்ளது.

எந்தவொரு ஊசலாட்டத்திற்கும் இடமின்றி கறாராக ஏகாதிபத்தியம்-பார்ப்பனியம் கூட்டணிக்கும், ஜனநாயக-புரட்சிகர கூட்டணிக்கும் இடையில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் ஒரு வரலாற்று நிர்பந்தம் இதோ ஆரம்பமாகிவிட்டது. எல்லாவித மன சஞ்சலங்களையும் விட்டொழித்து விட்டு சமரசமின்றி சிந்திக்க கோரி ஜனநாயக சக்திகளுக்கு இந்த கட்டுரையின் மூலம் அரைக் கூவி அழைக்கிறேன்.

இந்த அம்சத்தில் செயல்பட வேண்டிய தேவையை முன்னிட்டு முதல் முயற்சியாக இந்தியாவின் பெரிய பயங்கரவாதமாகிய பார்ப்பனியத்தின் பயங்கரவாதத்தையும், அரசு பயங்கரவாதத்தையும் அறிமுகப்படுத்தும் விதமாக இந்த தளத்தில் செய்திகள், விமர்சனக் கட்டுரைகள் இடம்பெறும். இந்த தளத்தில் பங்களிக்க விரும்பும் ஜனநாயக சக்திகள் இந்த பின்வரும் மெயில் ஐடியை தொடர்பு கொள்ளவும் - asuran@inbox.com. அல்லது இந்த பதிவில்(http://terrorinfocus.blogspot.com/) பின்னூட்டமிடவும். தகவல்களை பெயர் வெளியிட விரும்பாமலும் தரலாம். தகவல்களின் நம்பகத்தன்மை உத்திரவாதப்படுத்தப்பட்ட பின்பு வெளியிடப்படும்.

பிற சிறுபான்மை பயங்கரவாத நடவடிக்கைகளை விரிவாக பேசி துவேசம் பரப்ப பாசிஸ்டு ஊடகங்கள் இருக்கின்ற காரணத்தாலும், வேறு வெகுசன முதாலளித்துவ ஊடகங்கள் இந்த அம்சத்தில் விவாதத்தை முன்னெடுத்து சென்று மக்களிடம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி வருவதாலும் அவற்றிற்கு இங்கு முக்கியத்துவம் தேவைப்பட்டால் ஒழிய அளிக்கப்படாது.

Terrorfocus

Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Thursday, December 27, 2007

படியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4

உண்மை – குஜராத் 2002 எவர்கள் இதனைச் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து....

- ஆசிஸ் கேத்தன்.







வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆயுதங்களைப்,பெரும்பாலும் போலீஸின் உடந்தையோடு மாநிலம் பரவலாக தாயாரித்து விநியோகமும் செய்தார்கள்.

2002-ல் பஜ்ரங்தள் ராஷ்டிரீய ஸசன்யோக்கில் இருந்தவனும், தற்போது கோத்ரா சட்டமன்ற தொகுதியின் (கலவரத்துக்கு முன்பு வரை காங்கிரஸின் கோட்டை) பாஜக MLA ஆகவும் இருக்கும் ஹரேஷ் பட் என்பவன், தனதுச் சொந்தப் பட்டாசு தொழிற்சாலையில் வைத்து குண்டுகள் தாயாரிக்கப்பட்டதாக இதுவரை எவராலும் அறியப்படாத ஒரு தகவலைக் கூறினான். ராக்கெட் லாஞ்சர்கள் உள்பட நாட்டு வெடிகுண்டுகள் எல்லாம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்றத் தகவலையும் அவன் விளக்கினான். இவ்வாறு தாயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், பின்னர் அஹ்மதாபாத்திலுள்ள கொலைகார வன்முறை கும்பல்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

2002-ல் அஹ்மதாபாத்தில் ஊரங்குச் சட்டம் அமுலில் இருந்த போதும், வாள்கள் பஞ்சாப்பிலிருந்தும், நாட்டுத் துப்பாக்கிகள் உ.பி, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்றப் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டன. இவ்வாறு ஆயுதங்கள் வரவழைக்கப்பட்ட எந்த மாநிலங்களிலும் அப்போது பாஜக ஆட்சியில் இல்லாதிருந்தும் கூடக் கொண்டு வர முடிந்தது என பட் பெருமையாகக் கூறி கொண்டான். பிற மாநில எல்லைகளைக் கடந்துக் கொண்டு வரப்பட்ட ஆயுத குவியல்கள் ஒரு முறையல்ல, பலத் தடவைகள் கொண்டு வரப்பட்டன; "குவியல் குவியலாக அவைகள் இருந்தன" என்றத் தகவலையும் பட் வெளிப்படுத்தினான்.

குஜராத் கலவரத்துக்குச் சம்பந்தமில்லாததாக இருந்தாலும் கூட, "அவனால் பயிற்றுவிக்கப்பட்ட 40 இளைஞர்கள் டிசம்பர் 1992 பாபரி மசூதி இடித்த சம்பவத்தில் பங்கெடுத்ததாக", அதி முக்கியம் வாய்ந்த மற்றொரு இரகசியத்தையும் பட் வெளிப்படுத்தினான். இராணுவத்தில் தரப்படும் பயிற்சியை ப் போல, தடை ஓட்டப் பயிற்சி, 30 அடி கயிற்றில் எவ்வாறு ஏறுவது போன்றப் பயிற்சிகளை அவன் அந்த இளைஞர்களுக்குக் கொடுத்தானாம். அந்தப் பயிற்சி முகாம் இன்றும் அஹ்மதாபாத்தில் உள்ளது.




நன்றி பதிவர்கள்:

இறை நேசன்

தமிழரங்கம்

Wednesday, December 26, 2007

கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்: நவீன மனுநீதி!

""ஒரு இந்து ஏதாவது செய்து விட்டால் விசாரணைக் கமிசன் அமைக்கப்படுகிறது; ஆனால், ஒரு முசுலீம் ஏதாவது செய்துவிட்டால், அவன் தூக்கில் போடப்படுகிறான்.''

— மும்பய்க் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜாகீர் உசைனுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டவுடன், அத்தண்டனை குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் சொன்ன கருத்து இது. இதனை வெறுப்பில் விழைந்த வசவாக எடுத்துக் கொள்ள முடியாது. மும்பய் மற்றும் கோவை குண்டு வெடிப்பு வழக்குகளில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்ட விதத்தையும்; மும்பய் மற்றும் கோவை கலவர சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் முசுலீம்கள் என்பதாலேயே, அவ்வழக்குகளில் நீதி மறுக்கப்பட்டு விடுவதையும் ஒப்பிட்டுப்பார்த்தால், ஜாகீர் உசேனின் விமர்சனத்தில் உள்ள நியாயத்தை எவரும் மறுத்துவிட முடியாது.

1998இல் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அல்உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 69 பேர் மீது சதிக் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும்; 84 பேர் மீது சதிக் குற்றச்சாட்டு அல்லாத வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் தீர்ப்பளித்துள்ள சிறப்பு நீதிமன்றம், மதானி உள்ளிட்ட 8 பேரின் மீதான எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறியிருக்கிறது.

""தடா''சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெற்ற மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில் கூட , நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்டு பலருக்குப் பிணை வழங்கப்பட்டது. ஆனால், சாதாரண குற்றவியல் சட்டங்களின் கீழ் கோவை குண்டு வெடிப்பு வழக்கிலோ, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 168 பேரில் ஒருவருக்குக் கூடப் பிணை வழங்கப்படவில்லை. மதானிக்குப் பிணையே வழங்கக்கூடாது என அ.தி.மு.க. ஆட்சியில் உத்தரவு போடப்பட்ட விநோதமும் இந்த வழக்கில் நடந்தது.

இத்தீர்ப்பின்படி, 84 பேர் மீதான சதிக் குற்றச்சாட்டு — அதிகபட்சமாக தூக்கு தண்டனைத் தரக்கூடிய குற்றம் — நிரூபணமாகவில்லை. ஆனால், இவர்கள் ஏற்கெனவே விசாரணைக் கைதிகளாக ஒன்பதரை ஆண்டுக்கால ""தண்டனையை''அனுபவித்து விட்டதால், இவர்களைக் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்து வெளியேவிட்டால், அரசின் நடுநிலையான நீதி பரிபாலனை முறை அம்மணமாகிவிடும். அதனாலேயே இவர்கள் அனுபவித்த தண்டனைக் காலத்தை ஈடு செய்யும் வகையில், தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.

மதானி உள்ளிட்ட 8 பேர் மீது அரசால் சாட்டப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் நிரூபணமாகவில்லை. ஆனாலும், இவர்களை உடனடியாக விடுதலை செய்ய மறுத்துவிட்ட சிறப்பு நீதிமன்றம், விரும்பினால் இவர்கள் பிணையில் வெளியே போகலாம் என உத்தரவிட்டது. விசாரணை நீதிமன்றத்தாலேயே நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள், விசாரணைக் கைதிகளைப் போல பிணையில் வெளியே வந்துள்ள அதிசயமும் இந்த வழக்கில்தான் நடந்தது. தண்டனை அல்லது விடுதலை என்ற நீதி பரிபாலனமுறைக்கு இது எதிரானது என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் இத்தீர்ப்பைக் கண்டித்துள்ளனர்.

ஐந்து பேர் மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்திருந்த சிறப்பு நீதிமன்றம், ""இவர்கள் மீது அரசால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையென்றாலும், இவர்கள் மீது வேறு குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரம் உள்ளதாக'' "கண்டுபிடித்து' தீர்ப்பளித்தது. ""இந்த ஐந்து பேர் மீது புதிதாகக் குற்றம் சுமத்தப்பட ஆதாரம் இருந்தால், அக்குற்றச்சாட்டுகளை தனியாக விசாரணை நடத்திதான் தீர்ப்பளிக்க வேண்டும்'' என எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறியதை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், ""இந் நீதிமன்றம் குற்றவியல் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தீர்ப்பு அளிப்பதாக'' எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் திருமலைராசனும், ப.பா.மோகனும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

சிறப்பு நீதிமன்றம் சார்புத்தன்மையோடு, கொஞ்சம் பச்சையாகச் சொன்னால் காவித் தன்மையோடு நடந்து கொண்டதை நிரூபிக்கும் ஆதாரங்கள் இவை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சட்டபூர்வ உரிமைகளை மறுத்ததன் மூலம், அவர்களை எப்படியாவது தண்டித்துவிட வேண்டும் என்பதில் போலீசும், நீதிமன்றமும் கள்ளக் கூட்டாளிகளாகச் செயல்பட்டதை இவ்வழக்கு விசாரணை நெடுகிலும் காண முடியும்.

கோவை குண்டு வெடிப்பை, கோவை கலவரத்தோடு தொடர்பில்லாத தனித்ததொரு நட வடிக்கையாகப் பிரித்துப் பார்க்க முடியாது. கோவை கலவரத்தின் எதிர்வினைதான் கோவை குண்டு வெடிப்பு. இந்தியக் குற்றவியல் சட்ட நடைமுறையின் படி, கோவைக் கலவரத்தைதான் கோவை குண்டு வெடிப்பின் தூண்டுதல் வழக்காகவும்; எதிராளியை வம்புச் சண்டைக்கு இழுத்த வழக்காகவும் (அஞ்ணூணூஞுண்ண்ணிணூ) நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.

""இக்கோவைக் கலவரம் கூட, செல்வராஜ் என்ற போக்குவரத்து போலீசுக்காரர் சில முசுலீம் இளைஞர்களால் கொல்லப்பட்டதையடுத்து, தன்னெழுச்சியாக நடைபெற்றதல்ல; இந்து தீவிரவாதிகளும் போலீசும் கைகோர்த்து கொண்டு நடத்திய வன்முறை'' என அக்கலவரத்தைப் பற்றி விசாரணை நடத்திய கோகுலகிருஷ்ணன் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

கோவை கலவரத்தைத் தூண்டுதல் வழக்காக நிர்ணயித்து, குண்டு வெடிப்பு வழக்கை நடத்தியிருந்தால், குண்டு வெடிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்; அல்லது, குறைந்தபட்ச தண்டனைதான் கொடுத்திருக்க முடியும். இச்சட்ட பூர்வ உரிமை முசுலீம்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே, சிறப்பு நீதிமன்றம் கோவை கலவரத்தைப் பற்றி வாய் திறக்கவே மறுத்துவிட்டது.

குற்றச்சாட்டு வனையப்படும் பொழுதே (ஞூணூச்ட்டிணஞ் ணிஞூ ஞிடச்ணூஞ்ஞுண்), ""அக்குற்றச் சாட்டுகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரும் மனு கொடுத்து, அதன் மீது விசாரணை நடத்தக் கோரும் உரிமை'' குற்றம் சாட்டப்பட்டோருக்கு உண்டு. ""குற்றப்பத்திரிகை 17,000 பக்கங்களைக் கொண்டிருப்பதால், அதைப் படித்து விடுவிப்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும்'' என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரினர். ""உச்ச நீதி மன்றம் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு இட்டிருப்பதாக''க் கூறி, கால அவகாசம் அளிக்க மறுத்து விட்டது, சிறப்பு நீதிமன்றம்.

இவ்வழக்கில் 9 ஆவது குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்படிருந்த ஓம்பாபு என்பவருக்கு எதிராக, அவரது தம்பி முனாபை சாட்சி சொல்ல போலீசார் அழைத்து வந்தனர். முனாப் நீதிமன்றத்திலேயே, ""தனது அண்ணனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல போலீசார் தனக்கு இலஞ்சம் கொடுத்ததை'' அம்பலப்படுத்தியதோடு, போலீசார் கொடுத்த பணத்தையும் நீதிமன்றத்திலேயே ஒப்படைத்தார்.

விசாரணையின் பொழுது, சாட்சிகள் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியாமல் தடுமாறிய பொழுது, போலீசாரே சாட்சிகளுக்குக் குற்றவாளிகளை அடையாளம் காட்டி உதவினர். நீதிபதியோ, போலீசாரின் இந்த அத்துமீறலைக் கையைக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்.

குற்றவாளிகளைச் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் பொழும், சிறைச்சாலை வாசலில் சாட்சிகளை நிற்க வைத்து, அவர்களுக்குக் குற்றவாளிகளை போலீசார் அடையாளம் காட்டியிருக்கின்றனர். போலீசாரின் இந்த சட்டவிரோத நடவடிக்கையைக் குற்றவாளிகள் நீதி மன்றத்தில் முறையிட்ட பிறகும் கூட, சாட்சிகளை போலீசார் தயார்படுத்துவதை நீதிபதி தடுக்கவில்ல.

கோவைமேட்டுப்பாளையம் சாலையையொட்டி அமைந்துள்ள கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்த 38 பேர் மீது குண்டு வெடிப்பு வழக்கு பாய்ந்துள்ளது. ""இவர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் சம்பந்தம் இல்லை; குண்டு வெடித்த நாளன்று மாலையில் இந்து முன்னணியினர் கருணாநிதி நகரினுள் புகுந்து, கலவரம் நடத்தி, இந்த 38 பேரை போலீசில் அன்றே ஒப்படைத்ததையும்; போலீசார் இவர்களை இரண்டு நாட்கள் கழித்து 16..02.92 அன்று கைது செய்ததாகக் காட்டிய பொய்யையும்; இந்த 38 பேருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த வி.என்.ராஜன், இந்து முன்னணியைச் சேர்ந்த முழுநேர ஊழியர் என்பதையும்; இவர்களுக்கு எதிராகச் சாட்சியம் அளித்த அனைவரும் வீ.என். ராஜனின் சொந்தக்காரர்கள் என்பதையும்'' எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் விசாரணையின் பொழுது நிரூபித்துள்ளனர். எனினும், ஒரு இந்து முன்னணி குடும்பத்தின் பொய் சாட்சியத்தை நம்பி, 38 முசுலீம் குடும்பங்களைத் தண்டித்திருக்கிறது, நீதிமன்றம்.

அத்வானியின் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த பி.பி.ரோடு; சம்பந்தம் சாலை உள்ளிட்ட மூன்று இடங்களில் குண்டு வைத்த தீவிரவாதிகளை நேரில் பார்த்த சாட்சியாக விஜயகுமார் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இவரைப் போல 62 சாட்சிகள், பல இடங்களில் குண்டு வைத்துவிட்டுப் போன குற்றவாளிகளை நேரில் பார்த்த சாட்சிகளாக நிறுத்தப்பட்டனர். சினிமா கதாநாயகர்களைப் போல இந்த சாட்சிகள், ""இரண்டு மூன்று ரோல்களில் பிறந்திருந்தால்'' மட்டுமே இது சாத்தியம் என்பதால், இந்த 62 சாட்சிகளை மட்டும் மீண்டும் விசாரிக்க வேண்டும் என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரியதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இந்த வழக்கின் மிக முக்கியமானகுற்றவாளியாக முன் நிறுத்தப்பட்டவர் மதானி. அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட 23 சாட்சியங்களுள் ஒருவர்கூட, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சாட்சியம் அளிக்கவில்லை. இதிலிருந்தே போலீசாரின் புலன் விசாரணை எந்த இலட்சணத்தில் நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த வழக்கில் சாட்சியம் அளித்த 1,300 சாட்சியங்களுள் பெரும்பாலானவை, போலீசு தயார்படுத்திக் கொண்டுவந்த பொய்சாட்சியங்கள் அல்லது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரணையின் பொழுதே எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் நிரூபித்துள்ளனர். எனினும், அச்சாட்சியங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை நடுநிலையான, நியாயமான தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியுமா?

காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன் மீதான கொலை வழக்கின் விசாரணை தொடங்கும் முன்பே, அவர் சதிச் செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என நற்சான்றிதழ் வழங்கியது நீதிமன்றம். ஆனால், மதானி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித சாட்சியமும் இல்லை என்று வழக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட, இவருக்குப் பிணை வழங்க உச்சநீதி மன்றம் கூட மறுத்துவிட்டது.

தீட்டுப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சங்கராச்சாரிக்குச் சிறைச்சாலையில் தனிச்சமையல் செய்து கொடுக்கப்பட்டது. ஆனால், சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த மதானிக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு கூட மறுக்கப்பட்டது. ""சட்டத்தின் முன் அனைவரும் சமம்'', ""இந்தியா ஒரு மதச் சார்பற்ற குடியரசு'' என இந்திய அரசியல் சாசனம் பீற்றிக் கொள்கிறது. ஆனால், இது ஒரு மோசடி என்பதை நிரூபிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. நீதிமன்றங்களே அந்தத் திருப்பணியைச் செய்து விடுகின்றன.

அமெரிக்கா, அல்கொய்தா தீவிரவாதிகளை விசாரணையின்றி தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதை எழுதிய இந்தியப் பத்திரிகைகள், தமிழ்நாட்டில் 166 முசுலீம்கள் பிணைகூட வழங்கப்படாமல் துன்புறுத்தப்பட்டதைக் கண்டுகொள்ளவேயில்லை.

18 முசுலீம்கள் கொல்லப்பட்ட கோவை கலவரம் தொடர்பாக தொடரப்பட்ட ஏறத்தாழ 100 வழக்குகள், போதிய சாட்சியம் இல்லாததால் விசாரிக்க முடியாது எனக் கூறிக் கைவிடப்பட்டது நம்முன் எத்தனை பேருக்குத் தெரியும்? போலீசுக்கு மாமூல் கொடுக்க மறுத்து வந்த முசுலீம்களின் வியாபார மேலாண்மை தகர்க்கப்பட்டதையும்; குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்பட்டிருக்கும் பல முசுலீம்கள் நடைபாதை வியாபாரிகள் என்பதையும் எந்த ஓட்டுக்கட்சிகள், பத்திரிகைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன?

மும்பய் வெடிகுண்டு தாக்குதலின் சூத்திரதாரியான தாவூத் இப்ராஹிம் ""ஓடி ஒளிந்து வாழும்'' குற்றவாளியாக ""தடா'' நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், மும்பய் கலவரத்தின் தளபதியாகச் செயல்பட்டதாக, அக்கலவரத்தை விசாரித்த சீறீகிருஷ்ணா கமிசனால் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள சிவசேனாதலைவர் பால் தாக்கரேயை, மும்பய் நீதிமன்றமே வழக்குகளில் இருந்து விடுதலை செய்திருக்கிறது. அவர் கலவரத்தைத் தூண்டிவிடவில்லை என காங்கிரசு கூட்டணி ஆட்சியே நற்சான்றிதழ் வழங்கிவிட்டது. சிறீகிருஷ்ணா கமிசனால் குற்றஞ் சுமத்தப்பட்ட சிவசேனாவைச் சேர்ந்த மதுகர் சர்போத்தர், பா.ஜ.க.வைச் சேர்ந்த கோபிநாத் முண்டே உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மீது சட்டத்தின் சுண்டு விரல் கூட படவில்லை.

கலவரத்தின் பொழுது ஹரி மசூதிக்குள் போலீசு படையோடு புகுந்து, அங்கு தொழுகை செய்து கொண்டிருந்த ஏழு முசுலீம்களைச் சுட்டுக் கொன்ற நிகில் காப்ஸே என்ற போலீசு துறை ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கைக்கூட எடுக்கப்படவில்ல. மாறாக, அந்தத் துப்பாக்கிச் சூட்டில் முதுகுத் தண்டில் சுடப்பட்ட ஃபருக் மாப்கர், கலவரத்தில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கிற்காக, கடந்த பதினைந்து ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு வந்து போகிறார்.

சுலைமான் பேக்கரி எனும் நிறுவனத்திற்குள் புகுந்து, அங்கு பாதுகாப்பிற்காகப் பதுங்கியிருந்த முசுலீம்களின் மீது கண்மூடித்தனமாகச் சுட்டு, ஆறு பேரைக் கொன்ற ஆர்.டி.தியாகி என்ற போலீசு அதிகாரி, நிரபராதி என விடுவிக்கப்பட்டதோடு, அவர் பதவியில் இருந்து நிம்மதியாக ஓய்வும் பெற்றும் விட்டார்.

சிறீகிருஷ்ணா கமிசன் நிகில் காப்ஸே, ஆர்.டி. தியாகி உள்ளிட்டு 31 போலீசு அதிகாரிகளைக் குற்றவாளிகள் என ஆதாரத்தோடு குறிப்பிட்டுள்ளது. எனினும், அக்காக்கி சட்டை கிரிமினல்கள், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் மட்டுமல்ல, காங்.கூட்டணி ஆட்சியிலும் வழக்குவிசாரணை எதுவுமின்றி பாதுகாக்கப்பட்டனர். கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 2,300 வழக்குகளில் 1,371 வழக்குகள், மதச்சார்பற்ற காங்கிரசு ஆட்சியில்தான், கலவரம் முடிந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே, போதிய சாட்சியம் இல்லை என்ற காரணத்தால் கைவிடப்பட்டன.

மகாராஷ்டிரம் இந்து மதவெறியர்களின் செல்வாக்கு மிக்க மாநிலம் என்றாலும், மும்பய் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பையடுத்து, மும்பய் கலவர வழக்குகளிலும் நீதி வேண்டும் எனப் பல்வேறு முசுலீம் அமைப்புகளும், சனநாயக சக்திகளும் குரல் எழுப்பி வருகின்றன. தனது மதச்சார்பற்ற முகமூடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக காங்கிரசு கூட்டணி ஆட்சி, கலவரம் தொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை ஆராய கமிட்டியொன்றை நியமிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

ஆனால், கோவை கலவரம் தொடர்பாக இப்படிப்பட்ட வெற்று அறிவிப்பை வெளியிடக்கூட "சமூக நீதிக் காவலர்' மு.க.வின் ஆட்சி தயாராக இல்லை; தமிழகமும் வாய்மூடி மௌனம் காக்கிறது. இந்த மௌனத்தை உடைக்காமல், இந்து மதவெறியர்களை வீழ்த்த முடியாது; தண்டிக்கவும் முடியாது!

வசந்தன்

நன்றி: TamilCircle
நன்றி:
புதிய ஜனநாயகம்

Friday, December 21, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில் 1 -2

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...1 -2

உண்மை – குஜராத் 2002 எவர்கள் இதனைச் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து....

- ஆசிஸ் கேத்தன்.












நன்றி பதிவர்கள்:

இறை நேசன்

தமிழரங்கம்

Friday, October 26, 2007

பய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத்தனம்!

பாசிஸ்டுகளின் இயல்பே உண்மையை கண்டால் பயந்து அஞ்சி ஓடி ஒளிந்து கொள்வதுதான். பாருங்களேன் October 2004 ல் ஒரு பாசிஸ்டை ஒரு பொது மேடையில் நிறுத்தி உண்மைகளை கேட்ட பொழுது அது அஞ்சி நடுங்கி மேடையிலிருந்து பயந்து ஓடியது. இ஧தா அதே Octoberல் 2007ல் இன்னொரு பாசிஸ்டை வேறொரு மேடையில் நிறுத்தி உண்மைகளை கேட்ட பொழுதும் அஞ்சி நடுங்கி நா வறண்டு தண்ணீர் தாகமெடுக்க பதறி ஓடியுள்ளது.

இங்கு தமிழ்மணத்திலும், வேறு பல்வேறு இடங்களிலும், சம்பவங்களிலும் கூட பாசிஸ்டுகளின் முன்னால் மறுக்க இயலா உண்மைகளை வைத்த போதெல்லாம் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடி ஒளிந்ததை பார்த்த அனுபவம் நம்மில் பலருக்கு இருந்திருக்கும். இவர்கள் அனைவருமே பார்ப்பன பயங்கரவாத பாசிஸ்டுகள்.

அந்த அக்டோபர் சம்பவங்களை கீழே பார்ப்போம்.


October 2007-ல் ஒரு பார்ப்பன பயங்கரவாத பாசிஸ்டு - மோடி:

CNN IBN சேனலில் Devilஒs Advocate என்ற நிகழ்ச்சியில்(கலைஞர் கருணாநிதி இவருக்கு முன்பாக இதில் தோன்றியவர். அவர் அஞ்சி நடுங்கி ஓடி விடவில்லை) மோடியை கரன் தப்பார் என்பவர் பேட்டியெடுத்தார். பாசிஸ்டு மோடியிடம் கேட்க்கப்பட்டதெல்லாம் உண்மைகள் குறித்த ரொம்ப ரொம்ப சாதாரணமான கேள்விகள் மட்டுமே. அதற்க்கு பதிலளிக்க பயந்த அந்த கோழை பின்வருமாறு கூறி ஓடி விட்டான். அவர்களிடம் கேட்க்க தகுந்த நியாயமான கேள்விகளை கேட்டால் நெஞ்சு வெடித்து மேடையிலேயே மரணித்துவிடுவார்கள் போல...


KT: Can I point out to you that in September 2003 the Supreme Court said that they had lost faith in the Gujarat government? In April 2004 the Chief Justice of the Supreme Court said that you were like a modern day Nero who looks the other side when helpless children and innocent women were being burnt. The Supreme Court seems to have a problem with you.

Modi: I have a small request to make. Please go through the SC judgment. If there is anything in writing, I ll be happy to know everything.


KT: There was nothing in writing. You are right. It was an observation.

Modi: If it is in the judgment then Ill be happy to give you the answer.


KT: But do you mean a criticism by the Chief Justice in court doesnt matter?

Modi: Its a simple request. Please go through the court judgment. Hand out the sentence you are quoting and let the people know it.

KT: Ok. In August 2004 the Supreme Court reopened some 2,100 cases out of a total of around 4600 almost 40 per cent, and they did so because they believed that justice hadnt happened in Gujarat.

Modi: Ill be happy. Ultimately the court of law will take the judgment.


KT: Ill tell you what the problem is. Even five years after the Gujarat killings of 2002, the ghost of Godhra still haunts you. Why have you not done more to allay that ghost?

Modi: This I give it to the mediapersons like Karan Thapar. Let them enjoy.


KT: Can I suggest something to you?

Modi: I have no problem.


KT: Why cant you say that you regret the killings that happened? Why cant you say that may be the government should have done more to protect Muslims?

Modi: What I had to say I have said at that time, and you can find out my statements.


KT: Just say it again.

Modi: Not necessary that I have to talk about, in 2007, everything you want to talk about.


KT: But by not saying it again, by not letting people hear the message repeatedly you are allowing an image contrary to the interest of Gujarat to continue. Its in your hands to change it.

(Modi takes mike off)

Modi: Ill have to rest. I need some water.

Paani (water).

Modi: Dosti bani rahe bas (Friendship should be maintained, thatஒs all). Iஒll be happy. You came here. I am happy and thankful to you. I cant do this interview. Itஒs ok your things are. Apne ideas hain aap bolte rahiye aap karte rahiye (These are your ideas, you keep talking, keep doing). 3-4 questions Ive already enjoyed. Nahin please.


KT: But Modi saab...

Modi: Nahin, please Karan.


KT: But Modi saab.

Modi: Karan dekho main dostana sambhand rakhna chahta hoon, aap usko koshish kariye (Karan, I want to maintain friendly relations. You make efforts towards that).


KT: Mujhe ek cheez samjhayee sir. I am not talking about doing anything wrong. I am saying why cant you correct your image?

Modi: This is not the time. Uske liye aap mujhe 2002 mein mile hote, 2003 mein mile hote mein sab kar leta (for that, you should have met me in 2002, you should have met me in 2003, I would have done all that).



Thanks: The Hindu



தேசிய நாயகன் மோடி தேசிய காமெடியனாக மாறியதற்க்கு அவனது பாசிஸ இயல்பு தவிர வேறொன்றும் காரணமில்லை. உலகப் புகழ்பெற்ற பாசிஸ்டு ஹிட்லர் அவன் ஹீரோவாக இருந்த காலத்திலேயே காமெடியனாக சித்தரிக்க (The Great Dictator) முடிந்ததற்க்கு சார்லி சாப்ளினின் திறமை மட்டும் காரணமல்ல. அவன்(ஹிட்லர்) பாசிஸ்டு என்பதும் சேர்ந்துதான் அங்கே காமெடிக்கு வலு சேர்க்கிறது. பாசிஸ்டுகள் கோழைகளாக இருப்பது இயங்கியலின் விதி. பயப் பீதியில் இருக்கும் முதலாளித்துவத்தின் கடைசிப் புகலிடம் பாசிசம். அதன஡ல் கோழைத்தனம் என்பது அதன் அடிப்படை இயல்பு.

October 2004-ல் ஒரு பார்ப்பன பயங்கரவாத பாசிஸ்டு - ஜெயலலிதா:

இதே போல அக்டோ பர் 2004ல் ஜெயலலிதா என்ற பாசிஸ்டை மேடையில் உட்கார வைத்து சில சாதாரண கேள்விகள் கேட்டதற்க்கு அது பின்வருமாறு பதில் சொல்லி ஓடி விட்டது.
(http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/09/040930_jayainterview.shtml)


KT: Except for the fact that many people felt, not just the press this time, but the court was actually saying that legally you were innocent but morally you had a case to answer at least to yourself personally.

JJ: I told you I do not comment on any judgment of the Supreme Court, whether the judgment involves me personally or any other matter of public importance. I never have commented on any judgment of the Supreme Court, I will not do so.


KT: You are a very tough person, Chief Minister.

JJ: People like you have made me so.

KT: You said that you were misunderstood.

JJ: Yes.

KT: Do you think that you are badly treated by the press?

JJ: I do not wish to say anything more on this. Anyway your interview is not doing anything to help matters.

KT: My aim, Chief Minister, was to get to the core of the misunderstanding. You said that the press.

JJ: Your aim seems to have been to put as many unpleasant questions as possible and try to provoke me.

KT: Not to provoke you but to put to you the questions that have been discussed for the last three years and which in many ways may be responsible for the electoral adversityஸ

JJ: Havent you asked all of your questions? Have you got anything more to ask?

KT: I have come very close to the end of this interview, I have only one last question. Are you
confident that you can see your electoral low point over with, and that you will win in 2006?

JJ: Wait and see. I told you already I dont believe in astrology. I cant predict what will happen in the next elections but you will be around I suppose. Wait and see what happens.

KT: Is that a yes, you will win?

JJ: I said wait and see.

KT: Chief Minister, a pleasure talking to you on HARDtalk India.

JJ: I must say it wasnt a pleasure talking to you. Namaste

சாதாரண கேள்விகள் கேட்டால் அது இவர்களை தூண்டிவிடுகிறதாம். இவர்கள் சொல்லும் பொய்களை நம்பும் வெறியேற்றப்பட்ட கூட்டங்களில் பேசி பழகி விட்டார்கள் அல்லவா அதனால்தான் வித்தியாசமாக ஓரளவு சொந்த புத்தியுள்ளவர்கள் மத்தியில் பேசுவதற்க்கு இவர்களால் இயலவில்லை. இப்படி பீதி கொண்டு பயந்து ஓடுவதற்க்கு ஒரு சொறிநாயாக பிறந்திருக்கலாம். அல்லது ஒரு பன்றியாய் பிறந்து மலத்தை தின்று உயிர் வாழ்ந்திருக்கலாம். மானங்கெட்ட பொழப்பு.

அரசு இயந்திரத்தின் பலத்தில் நின்று கொண்டு அடாத ஆட்டம் ஆடும் இது போன்ற பாசிஸ்டுகளை வீதிகளில் சந்தித்து கேள்விகளாலேயே கொன்று விடலாம். அவ்வளவுதான் இவர்கள். ஒரு கரப்பான் பூச்சியை ஒத்ததோரு வாழ்க்கை, மன இயல்பு.

TerrorinFocus

Related Article:

கரண் தாப்பரிடம் இருந்து தப்பியோடிய மோடி: சீழ்ப் பிடித்து நாறும் இந்துத்துவ முகம்

Friday, June 1, 2007

நீ எங்கள் பக்கம் இல்லையென்றால் பயங்கரவாதிகளின் பக்கம் இருப்பதாக அர்த்தம்

ட்டுப்பாடில்லாத வரை எந்த ஒரு அடக்குமுறை வடிவத்தின் உண்மை முகமும் வெளித் தெரிவதில்லை. எல்லாம் கிடைக்கும் வரை இன்றைய குடும்ப என்கிற அடக்குமுறை வடிவம் கூட மிக இனிமையானதாகவே இருக்கிறது. ஏதாவது ஒரு விசயத்தில் தட்டுப்பாடு ஏற்ப்படும் போது அந்த அடக்குமுறை தனது உண்மை முகத்தை காட்டுகிறது போலியாக கிடைத்து வந்த சலுகைகளும், சுதந்திரமும் பறிக்கப்படுகிறது.

இதே நிலைதான் அரசு என்ற வடிவத்துக்கும். மறுகாலனியச் சூழலில் பிரச்சனைகள் பெருக பெருக மக்கள் ஆங்காங்கே நேரடியாக அரசுடன் யுத்தம் நடத்தி வருகிறார்கள். நேற்றைய காலங்களில் வழங்கப்பட்ட, நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகள் விதந்தோம்பி வரும் சொற்ப ஜனநாயக உரிமைகள் இன்றைய நெருக்கடியான நிலைகளை சமாளிக்க பெருத்த இடைஞ்சலாக அரசின் முன் வந்து நிற்கிறது. அந்த பேயரளவிலான உரிமைகளையும் குப்பைத் தொட்டியில் கடாசுகிறது அரசு.

போலி என்கௌண்டர்கள், மோசடி பேர்வழிகளைப் பற்றி மேடைப் போட்டு பேச தடை, வால் போஸ்டர் ஒட்டினால் தேசத் துரோக சட்டத்தில் கைது, மத நல்லிணக்கம் குறித்து பேசினால் அதற்க்கும் தடை, மக்கள் பிரச்சனைகளுக்கு போராடினால் பதிலுக்கு குண்டாந்தடிகளே வருகின்றன. இப்படி உருமாறி தனது சுயரூபம் காட்டி வரும் மறுகாலனியத்தின் இன்னுமொரு விளைவாக பின்வரும் விசயம் நடந்துள்ளது.

மருத்துவர் பினாயக் சென்(Binayak Sen) என்பவரை அவர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளவர் என்பதாக கூறி கைது செய்துள்ளது போலீஸ். சட்டிஸ்கரில் மிகவும் மதிக்கப்படும் ஒரு ஆளுமை இவர். சட்டிஸ்கரில் அவர் ஒரு முக்கியமான மனித உரிமை போராளி (PUCL), பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து வெளிக் கொண்டுவந்தவர். காவல் நிலைய மரணங்கள், போலி என்கௌண்டர்கள், பட்டினிச் சாவுகள், வயிற்றுப் போக்கு ஊட்டச் சத்து குறைப்பாடு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சனைகளை வெளி உலகின் பார்வைக்கு கொண்டு வந்தவர். சல்வாஜுடம் என்ற பெயரில் சட்டீஸ்கர் அரசு தனது சொந்த மக்கள் மீது ஏவிவிட்டுள்ள அடக்குமுறை போரின் கோர பக்கங்களை (கிராமத்தோடு மக்களை மிரட்டி நிவாரன முகாம்களில் அடைத்து வைப்பது, வீடுகள், நிலங்களை தீயிட்டு கொளுத்துவது முதல் பல்வேறு கொடுமைகள்) வெளிக் கொண்டு வந்ததில் முக்கியமானவர் இவர்.

அவரை கைது செய்த பின் அவருடைய வீட்டை சோதனையிட்ட போலீஸு அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு நோட்டிஸ்கள் சிலவும், மாதன் என்கிற மாவோயிஸ்டு தலைவரிடமிருந்து வந்த ஒரு கடிதமும் எடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் ரய்ப்பூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மாவொயிஸ்டுகளின் படு மோசமான நிலையை எடுத்து கூறி அதற்க்கு PUCL மூலம் இந்த கொடுமைக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறது. அந்த கடித்ததில் அன்பு தோழர் பினாயக் சென் என்று குறிப்பிட்டிருந்ததுதான் பிரச்சனைக்கு காரணமே. இது தவிர்த்து 30 முறை நாராயன் சண்யால் என்ற மாவோயிஸ்ட் தலைவரை சிறையில் சென்று சந்தித்தார் இவர் என்பதுதான் இன்னொரு மிக முக்கிய குற்றச்சாட்டு.

பிரஃபுல் பிட்வய்(praful bidwai) என்பவர் இந்த குற்றச்சாட்டுகள் அடி முட்டாள்தனமானவை என்கிறார். "அரசு அதிகாரிகளின் அனுமதியுடன், ஜெயிலரின் மேற்பார்வையிலேயே சிறையில் இருந்த நாராயனை சந்தித்துள்ளார் சென். சிறையில் இருக்கும் ஒருவரை பார்த்து அவர்து அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவது சென்னிடைய சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒரு செயல்பாடே. அப்படியிருக்க 35 முறை பார்த்தார், 100 முறை பார்த்தார் என்ற கணக்கெல்லாம் அர்த்தமற்றது" என்கிறார்.

அமெரிக்க கோக்கே வெளியேறு என்று வால்போஸ்டர் ஒட்டினாலே தேசத் துரோகம் எனும் போது மாவொயிஸ்டுகள் தோழர் என்று விளித்து எழுதிய கடிதத்தை வைத்திருந்தால் அது உண்மையிலேயெ இந்த அரசின் வரையறைப்படி மரண தண்டனை கொடுக்க தகுந்த தேசத் தூரொகம்தான். அவர்களை சிறையில் சந்தித்தாலோ அதைவிட பெருத்த குற்றம். ஆயினும் 1947க்கு முன்பு நம்மை நேரடியாக ஆட்சி செய்த பிரிட்டிஸ்க்காரன் கூட இந்தளவுக்கு கடுமையாக தனது நலனை பேணிப் பாதுகாக்கவில்லை. அடிவருடி அரசோ தனது அடிமை சேவகத்தை ஓவர் ரியாக்ஸனாக வெளிப்படுத்துகிறது.

பாசிசம் முதலாளித்துவத்தின் உண்மை உருவம். அதுவும் முதலாளித்துவத்தின் உச்ச கட்டமான(கடைசி கட்டமல்ல) ஏகாதிபத்திய காலத்தில் பாசிசம் இன்னும் கோடூரமாக வெளிவருகிறது. 'எந்த ஒரு நாட்டையும் அடிமைப்படுத்தியுள்ள நாடு தன்னளவில் சுதந்திரமானதாக இருக்காது'. இந்த உண்மையும் வேறெந்த காலத்தையும் விட இன்றைய மறுகாலனியாதிக்க சூழலில் பேருண்மையாய் வெளி வருகிறது. ஏகாதிபத்திய நாடுகள் இந்தியா போன்ற நாடுகளில் தமது சுரண்டலை அதிகப்படுத்த அதிகப்படுத்த தமது சொந்த நாடுகளின் அவை வழங்கி வந்த ஜனநாயக உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வருகின்றன. பதிலுக்கு இந்திய போன்ற நாடுகளோ ஏகாதிபத்திய சுரண்டலை எதிர்க்கும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க வசதியாக ஒவ்வொரு ஜனநாயக உரிமைகளையும் குழி தோண்டி புதைத்து வருகிறார்கள். இன்று இவர் நாளை அடிமைத்தனத்தை எதிர்க்கும் யார் வேண்டுமானாலும்.

அருந்ததிராயின் வார்த்தைகளில் சொல்வதென்றால், "இந்திய ஒரு போலீஸ் ராஜ்யமாக மாற இருக்கிறது. அங்கு நடப்பவற்றை ஏற்றுக் கொள்ளாத ஒவ்வொருவரும் பயங்கரவாதி என்று அழைக்கப்படும் அபாயம் உள்ளது..... பயங்கரவாதம் என்ற சொல்லாடலுக்கு எந்தவொரு தெளிவான விளக்கமும் கொடுக்காமல் விட்டு வைத்திருப்பதன் மூலம் அதன் அர்த்தம் மிகப்பரந்து விரிந்ததாக திட்டமிட்டே விடப்பட்டுள்ளது. நாமும் கூட வெகு விரைவில் மாவோயிஸ்டுகள் என்றோ நக்சலைட்டுகள் என்றோ, பயஙகரவாதிகள், பயங்கரவாதி ஆதரவாளன் என்றோ அழைக்கப்பட்டு முடித்துக்கட்டப்படும் நாள் வெகு தூரத்திலில்லை."

ஒரு அரைக்காலனியாக உள்ள இந்தியாவில் ஜனநாயகம் என்பது படித்த நடுத்தர வர்க்கத்திற்க்காவது கிடைத்து வந்தது. அதுவும் தற்போது தரகு அரசுக்கு பெருத்த இடைஞ்சாலாகி விட்டபடியால் கழட்டியெறியப்பட்டு கிழிந்த கோமணாய் அரைக் கம்பத்தில் தொங்கிறது. போலி சுதந்திர தினத்தன்று பறக்கவிடப்பட்ட மூவர்ணக் கொடியோ அரைக் கோமணத்தின் முடை நாற்றத்தில் மூச்சு திணறி தலை தாழ்ந்துள்ளது.

ஆக, அன்புள்ள வாசக பயங்கரவாதிகளே (பின்ன, தற்போதைய வரையறைப்படி பயங்கரவாதியினுடைய எழுத்துக்களை படிப்பவரும் கூட பயங்கரவாதிதானே) இந்த செய்தியை எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள். இமெயிலில் அனுப்புங்கள். இதுதான் இன்றைய இந்தியா, நாளைய இந்தியா....


TerrorinFocucs

நன்றி: அரசுபால்ராஜ்


Tuesday, May 29, 2007

குற்றம் நிருபீக்கப்படவில்லை - தண்டனைகள் மட்டும் கனஜோர் - யார் பயங்கரவாதி?


நரேந்திர மோடி: தேசிய நாயகனா? அரசு பயங்கரவாதகொலைகாரனா?


டந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியன்று குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் சோராபுதீன் ஷேக் என்பவர், போலீசுடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இவர் லஷ்ஹர்இதொய்பா அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் தீவிரவாதி என்றும், இவர் குஜராத் முதல்வர் மோடியையும், விஷ்வ ஹிந்து பரிசத் தலைவர்களையும் கொல்ல வந்த பயங்கரவாதி என்றும் போலீசார் அறிவித்தனர்.

உண்மையில், சோராபுதீன் தீவிரவாதியோ பயங்கரவாதியோ அல்ல; அவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். சோராபுதீனின் சகோதரரான ரூபாபுதீன், இந்த மோதலில் சோராபுதீன் கொல்லப்பட்டது பற்றியும் அவருடன் சென்ற அவரது மனைவி கௌசர்பானு காணாமல் போனது பற்றியும் மைய புலனாய்வுத் துறை விசாரிக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் முறையிட்டார். குஜராத் மாநில அரசிடம் இதுபற்றி விசாரித்து அறிக்கை தருமாறு உச்சநீதி மன்றம் நிர்பந்தித்ததால், அம்மாநில அரசு கீதாஜோரி என்ற புலனாய்வு அதிகாரியின் தலைமையில் விசாரணைக் குழுவொன்றை நியமித்தது.

2005 நவம்பர் 23ஆம் நாளன்று, ஹைதராபாத் நகரிலிருந்து மகாராஷ்டிர மாநிலம் சாங்லி நகருக்குப் பேருந்தில் பயணம் செய்த சோராபுதீன் தம்பதியினரையும், துளசிராஜ் பிரஜாபதி என்பவரையும் சீருடைய அணியாத ராஜ்குமார் பாண்டியன் எனும் பயங்கரவாத எதிர்ப்புப் படைøயச் சேர்ந்த குஜராத் போலீசு உயரதிகாரி தலைமையிலான குழுவினர், நள்ளிரவில் பேருந்தை வழிமறித்து நிறுத்தி, அம்மூவரையும் இறக்கி தங்கள் வாகனங்களில் கடத்திச் சென்றனர்.

கடத்திச் செல்லப்பட்ட இம்மூவரில் சோராபுதீன், மூன்று நாட்களுக்குப் பிறகு அகமதாபாத் புறநகர் பகுதியில் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டு, மோடியைக் கொல்ல வந்த பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்டார். போலீசு ஆள்காட்டியான துளசிராஜ் பிரஜாபதி, இப்படுகொலையை வெளியே கக்கிவிடுவாரோ என்று சந்தேகித்து அவரையும் போலீசு கொன்றொழித்துத் தடயங்களை அழித்து விட்டது. சோராபுதீனின் மனைவி கௌசர்பானு, சபர்கந்தா காட்டுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு போலீசாரின் கும்பல் வன்புணர்ச்சிக்குப் பின் சுட்டுக் கொல்லப்பட்டு, எரித்து சாம்பலாக்கப்பட்டார்.

கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குஜராத் மாநில அரசிடம் சமர்பித்த இடைக்கால அறிக்கையில், உதிரத்தை உறைய வைக்கும் இந்த உண்மைகளை கீதாஜோரி விசாரணைக் குழு வெளிக்கொணர்ந்தது. தற்போது எல்லா விசயங்களும் அம்பலமாகிப் போனதால், வேறு வழியின்றி மூன்று போலீசு உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோடியைக் கொல்ல முயன்றதாகக் கதைகட்டி நடத்தப்பட்ட இப்போலி மோதல் நாடகத்தைத் தலைமையேற்று வழி நடத்திய வஞ்சாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ்குமார் ஆகிய மூன்று போலீசு உயரதிகாரிகளும் மோடிக்கு மிக நெருக்கமானவர்கள்; அவரது கண்ணும் காதும் மூக்கும் மூளையுமாகச் செயல்பட்டவர்கள்.

இவர்களில் பயங்கரவாத எதிர்ப்புப் படைக்குழுவின் டி.ஐ.ஜி.யான வஞ்சாரா ""மோதல் கொலை நிபுணர்'' என புகழப்பட்டவர். இதுவரை 9 போலி மோதல்கள், 15 பேர் படுகொலை என விரியும் இவரது பயங்கரவாதக் கொலைப்பட்டியலில், மும்பையின் ஏழை முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஸ்ரத் ஜெஹானும் அடக்கம். கடந்த 2004ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இம்மாணவி, மோடியைக் கொல்ல வந்த பயங்கரவாதியாகவே சித்தரிக்கப்பட்டார்.

குஜராத்தின் பயங்கரவாத போலீசார், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இத்தகைய போலி மோதல் கொலைகளை நடத்தி, ஒவ்வொரு முறையும் தாவூத் இப்ராஹிமிடமிருந்து பாகிஸ்தான் உளவுத்துறை வரை பழிபோட்டு, மோடியை தேசிய அளவில் பாதுகாக்கப்பட வேண்டிய அதிமுக்கிய தலைவராகச் சித்தரித்து, இந்துவெறி தேசியவெறியை கிளறிவிட்டு வந்துள்ளனர். கடந்த ஈராண்டுகளில் மட்டும் 25க்கும் மேற்பட்ட இத்தகைய போலி மோதல் கொலைகள் போலீசாரால் நடத்தப்பட்டுள்ளன.

இப்போது போலி மோதல் கொலைகள் மூலம் மோடியின் பயங்கரவாதச் சதிகள் அம்பலமான பின்னரும், இக்கொலைகார இந்துவெறி பாசிசத் தளபதியை, இந்திய நாட்டின் சட்டம் தண்டிக்காமல் வேடிக்கை பார்க்கிறது. மதவெறி சக்திகளை வீழ்த்தப் போவதாக சவடால் அடித்து ஆட்சியைப் பிடித்த காங்கிரசு கூட்டணி அரசு கை கட்டி நிற்கிறது. இடதுவலது போலி கம்யூனிஸ்டு கட்சிகளோ, காங்கிரசு கூட்டணி அரசை முட்டுக் கொடுத்து ஆதரித்துக் கொண்டு, மதவெறி சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்கப் போவதாக வீரவசனம் பேசிக் கொண்டிருக்கின்றன.

· தனபால்


நன்றி - தமிழரங்கம்

TerrorinFocus


மதவெறியும், அரசும் இணையும் புள்ளி - மர்கோவாவில் பேச்சுரிமைக்கு தடை

தவெறியும், அரசும் இணையும் புள்ளி - மர்கோவாவில் பேச்சுரிமைக்கு தடை மர்கோவாவில் 'மதவெறியால் இந்தியாவில் மதசார்பற்ற ஜனநாயகத்திற்க்கு ஏற்ப்பட்டுள்ள அபாயம்' என்ற தலைப்பில் நடைபெற இருந்த ஒரு பொதுவிவாதத்திற்க்கு தடை போட்டுள்ளது கோவா போலீசும், துணை நீதிபதி டெரக் நெட்டொ(Derek Neto).

இவர்களின் பேச்சினால் அங்கு மத கலவரம் நிகழும் என்று அறியதொரு கண்டுபிடிப்பை காரணமாக சொல்லியுள்ளார்கள் இவர்கள். தோகாடியாவும், அதவானியும், இன்னபிற சங் பரிவார குரங்குகளும் பல்வேறு பொய்களை பரப்பி இந்தியா முழுவதும் செய்து வரும் கலவரங்களை கண்டு கொள்ளாத இந்த அரசும் நீதிமன்றமும் அதற்கெதிரான விவாதஙகளைக் கூட தடை செய்வதன் மூலம் இவர்கள் உண்மையில் யாருடைய அல்லக்கைகள் என்பதனை மிகத் தெளிவாகவே வெளிப்படுத்துகிறார்கள். ஏகாதிபத்திய சேவை செய்யும் ஒரு அரசு இயந்திரமும், பார்ப்ப்னியம் ஒன்றையொன்று சார்ந்து நின்றே இயங்கும் என்பது சரிதான்.

Talk on communal harmony in Goa stopped

CEC: 'SDM's decision to stop public talk in Goa was wrong'

TerrorinFocus

Monday, May 28, 2007

பார்ப்பன திமிரின் வண்ணம்!

நீல வண்ணம் எந்த வருணம் ?

சிறி
27.05.06







Jodhpur, the blue city

in Jodhpur, Rājasthān (India)

போருக்கு போன தன் மணவாளன் மீளத்திரும்பாதபோது அவன் வாளுக்கு மாலையிடும் வீரத் திருமகள்கள் என்று வீரம் ஊறிப்போன இராஜ புத்திரர் பரம்பரைப் புகழ் பேசும் ராஜஸ்தான் மாநிலத்தில் அதன் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 285 கிலோமீற்றர் தெற்காக அமைந்திருக்கும் ஜொத்பூர் ராஜஸ்தான் மாநிலத்தின் இரண்டாவது பிரதான நகரமாகும். மேலேயுள்ள படங்கள் இந்த ஜொத்பூர் நகரத்தின் மையப்பகுதி.


இந் நகரம் நீல வண்ணத்தில் குளித்தெழுந்திருப்பது தற்செயலானதல்ல. தேர்ந்தே தெரிவு செய்து நீல நிறம் பூசப்பட்ட இந்த நீல வண்ண வீடுகள் எதையோ பறைசாற்றுகின்றன. அது வேறு எதுவுமல்ல பார்ப்பனர் தம்மை மற்றையோரிடமிருந்து பிரித்தறிவிப்பதற்காக பூசிக் கொண்ட சாயம்.


நீல வண்ண வீடா கவனம் ? நீ பார்ப்பான் வீட்டில் காலடி வைக்கின்றாய் என்று கீழ்சாதிக்காரனுக்கு அறைந்து சொல்வதற்காக திமிருடன் பூசிய நீல வண்ணச் சாயம். சாதித்திமிர் தனது இல்லங்களுக்கும் சாதிச்சாயம் பூசிக் கொண்டு தன்னை திமிராய் அடையாளப்படுத்தியதன் மூலம் சாயம் பூசா இல்லவாசிகளை தனக்கு கீழானதாய் இழிவுபடுத்தும் இந்த பார்ப்பனச் சாதிச் சாயக் கொள்கையை சாய்ப்பது எப்படி?


Google Earth இல் படங்கள் தெளிவாக பெறலாம்

மேலும் பல விரிவான கட்டுரைகளுக்கு
நன்றி தமிழரங்கம் இணையத்தளம் செல்க

Monday, May 21, 2007

ஏன் இந்த தளம்?

யங்கரவாதம் என்றால் என்ன? ஆளும் வர்க்கம் தனக்கு எதிரான எல்லாவற்றையும் பயங்கரவாதம் என்ற ஒற்றை வாதத்தில் அடக்கி ஒடுக்கும் தந்திரத்தை செயல்படுத்தி வருகிறது. இன்னொரு பக்கம் பார்ப்பனிய பயங்கரவாதம் ஆளும் வர்க்கமாக இருந்து கொண்டே தனது இருப்பை நியாயப்படுத்தும் தேவைக்காக தனது வர்க்க நலன்களுக்கு நேரெதிரானவர்களையும், மத சிறுபான்மையினரையும் பயங்கராவாதிகள் என்று முத்திரை குத்தி பீதி கிளப்புவதன் மூலமே தனது மக்கள் விரோத பயங்கரவாத நடவடிக்கைகளை மக்களின் பார்வையிலிருந்து பாதுகாத்து வருகிறது.

இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழல் உருவாக்கும் சமூக பொருளாதார அழுத்தம் என்பது அதன் உண்மையான வடிவங்களில் வெளி வருவது என்பது ஆளும் வர்க்கங்களுக்கு என்றுமே ஆபத்தானதுதான். அப்படியே எங்கேனும் வந்தால் கூட அவற்றையும் பயங்கரவாத முத்திரை குத்தி வெகு சன அரங்கில் தனிமைப்படுத்தி முறியடிக்கும் தேவை தரகு வர்க்கத்துக்கு உள்ளது(Nandigram, etc).

வரைமுறையின்றி இந்தியாவின் வளங்களை கூட்டிக் கொடுக்கும் தரகு வர்க்க அரசியல்வாதிகளும், அதற்க்கு தரகு வேலை செய்யும் பார்ப்ப்னிய பயங்கரவாதிகளும் தமது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள தொடர்ந்து ஒரு போலியான எதிரியை உருவாக்கும் தேவை உள்ளது.

பார்ப்பனியத்தின் நலனும், ஏகாதிபத்தியத்தின் நலனும் ஒரு சில சொற்பமான விசயங்களைத் தவிர்த்து வேறு எங்கும் முரன்படவில்லை. ஆனால் இவர்கள் இருவரின் நலனும் ஒன்றிணையும் புள்ளிகள் பல உள்ளன. தொடர்ந்து பயங்கரவாத பீதியூட்டுவதன் மூலம் தமது பாசிச செயல்பாடுகளையே நியாயமானது என்ற பொதுக்கருத்தை வலுப்பெறச் செய்யும் தேவை இருவருக்கும் உள்ளது.

ஏகாதிபத்தியத்தின் தேவைக்குட்பட்டு பார்ப்பனியம் இங்கு இருக்கும் அதே வேளையில் உபரியாக பார்ப்ப்னியத்தின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்குபவர்களுக்கு எதிராகவும் இந்த பாசிச சூழலை பயன்படுத்தும் சலுகையை ஏகாதிபத்தியம் பார்ப்ப்னியத்திற்க்கு உறுதிப்படுத்துகிறது.

அதே நேரத்தில் இந்திய பாசிசமான பார்ப்பனியத்தின் சித்தாந்த அடிப்படை என்பதே ஏகாதிபத்தியத்தின் சமூக பொருளாதார சுரண்டல் வடிவத்துக்கு சேவை செய்வதாக உள்ளதும் இவர்களின் சகோதரத்துவ உறவுக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

இந்த சூழலில், ஏகாதிபத்தியத்திற்க்கு சேவை செய்யும் எந்தவொரு வோட்டுக் கட்சிகளும் தவிர்க்க இயலாமல் பார்ப்பனிய நடைமுறைகளை தமது செயல்பாடுகளாக கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதன் அளவு வேண்டுமானால் வோட்டுக் கட்சிக்கு வோட்டு கட்சி மாறுபடலாம். ஆனால் பார்ப்பனியம் இன்றி ஏகாதிபத்திய சேவை இந்தியாவில் செய்ய இயலாது என்பதுதான் உண்மை.

மேலும் பார்ப்பனியம் தனது நலன்களை மட்டும் முன்னிறுத்தும் சில பத்து அமைப்புகளை கொண்டுள்ளதோடல்லாமல். தனது தேவைக்காக பிற மத, இன, சாதி ஆட்களையும் சேவை செய்ய வைக்கும் இயல்புடன் எல்லா வகை அமைப்பு வடிவங்களிலும் ஊடுருவி நிற்கிறது. சில ஆயிரம் வருடங்கள் ஆட்சியிலிருந்த பார்ப்பனியம் சமூகத்தின் அனைத்து விழுமியங்களிலும் தனது இருப்பை காட்டிக் கொள்வது ஆச்சரியமான விசயமல்ல. இதனை நேரடியாக பார்ப்பனிய கட்சிகளில் இல்லாமலேயே பார்ப்பனிய சேவை செய்யும் பிற வோட்டுக் கட்சி பயங்கரவாதிகள் அதீதமாக காணக் கிடைப்பதைக் கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம்.

இதே நிலைதான் ஊடகங்களிலும் நிலவிவருகிறது. ஊடகங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியம் பார்ப்ப்னியம் என்ற இந்த கூட்டணியின் நீட்சியாகவே இருக்கின்றன. இவையணைத்தும் சொல்லி வைத்தது போல ஒரே மாதிரி பிரச்சாரம் செய்யும் அளவு அதன் நிர்வாக இடங்களில் RSS ஆட்கள் உட்கார்ந்துள்ளனர்.

இந்நிலையில் பின்வாங்கியதாக பரவசவாத குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவிகளால கருதப்பட்ட பார்ப்பனியம் இன்னும் வெளிப்படையாக தனது பாசிச நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொணடு பொது அரங்கில் வெளிகாட்டி வருகிறது. இன்னொரு பக்கம் மறுகாலனிய நடவடிக்கைகளும் மிக வேகமாக ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை வேகம் பெறுகின்றன என்ற உண்மை நமக்கு நேர்மறையாக சொல்லும் விசயம் என்னவென்றால், இதற்கெதிரான மக்களின் போராட்டங்களும் வேகம் பெரும் என்பதைத்தான்.

எதிர்மறையாக நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், இவர்களின் பாசிச நடவடிக்கைகளும் வீரியம் பெற இருக்கின்றன என்பதே ஆகும். இவர்களின் பய பீதியூட்டும் கோயபல்ஸ் பிரச்சாரம் வேகம் பிடிக்கப் போகின்றன என்பதே ஆகும். பய பீதியூட்டவும், போலி எதிரியை உருவாக்கவும் தேவையான சம்பவங்கள் இனி தொடர்ந்து அடிக்கடி உற்பத்தி செய்யப்படும் என்பதே ஆகும்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் போடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரும் முயற்சி நடந்தேறி வருகிறது. எந்த வகையிலும் வோட்டுக் கட்சிகள் இவர்களின்(ஏகாதிபத்தியம், பார்ப்பனியம்) நலனுக்கு ஊறானவர்கள் இல்லை என்பதால் போடா சட்டத்தில் வோட்டுக் கட்சிகளுக்கு மட்டும் விலக்கு கொடுக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் போடா சட்டம் தனது உண்மையான இலக்காகிய ஜனநாயக, புரட்சிகர சக்திகளுக்கு எதிராக மட்டும் வேலை செய்வதை உறுதிப்படுத்துவதுடன், அதற்க்கு எல்லா பிழைப்புவாதிகளின் ஆதரவையும் உறுதிப்படுத்த இருக்கின்றன பாசிச சக்திகள்.

இந்நிலையில் ஒவ்வொரு ஜனநாயகவாதியின் கடமையாக பார்ப்பனியத்தின் முழு வடிவத்தையும் (அதன் வர்க்க சார்பு, வர்ண சார்பு, சித்தாந்த பின்புலம்) புரிந்து கொண்டு அதற்கெதிரான கருத்து பிரச்சாரத்தை, அதன் ஆணி வேரை தகர்த்தெறியும் வகையில் செய்ய வேண்டிய மிக மிக முக்கியமாக உள்ளது. மாற்று ஊடகங்களை கட்டியமைப்பதின் மூலம் இந்த் உண்மையான அதி பயங்கர பயங்கரவாதம் குறித்து வெகு சனங்களிடம் கொண்டு செல்லும் கடமை வேறு எப்போதையும் விட இன்று மிக முக்கியமானதாக முன் வந்துள்ளது.

எந்தவொரு ஊசலாட்டத்திற்கும் இடமின்றி கறாராக ஏகாதிபத்தியம்-பார்ப்பனியம் கூட்டணிக்கும், ஜனநாயக-புரட்சிகர கூட்டணிக்கும் இடையில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் ஒரு வரலாற்று நிர்பந்தம் இதோ ஆரம்பமாகிவிட்டது. எல்லாவித மன சஞ்சலங்களையும் விட்டொழித்து விட்டு சமரசமின்றி சிந்திக்க கோரி ஜனநாயக சக்திகளுக்கு இந்த கட்டுரையின் மூலம் அரைக் கூவி அழைக்கிறேன்.

இந்த அம்சத்தில் செயல்பட வேண்டிய தேவையை முன்னிட்டு முதல் முயற்சியாக இந்தியாவின் பெரிய பயங்கரவாதமாகிய பார்ப்பனியத்தின் பயங்கரவாதத்தையும், அரசு பயங்கரவாதத்தையும் அறிமுகப்படுத்தும் விதமாக இந்த தளத்தில் செய்திகள், விமர்சனக் கட்டுரைகள் இடம்பெறும். இந்த தளத்தில் பங்களிக்க விரும்பும் ஜனநாயக சக்திகள் இந்த பின்வரும் மெயில் ஐடியை தொடர்பு கொள்ளவும் - asuran@inbox.com. அல்லது இந்த பதிவில்(http://terrorinfocus.blogspot.com/) பின்னூட்டமிடவும். தகவல்களை பெயர் வெளியிட விரும்பாமலும் தரலாம். தகவல்களின் நம்பகத்தன்மை உத்திரவாதப்படுத்தப்பட்ட பின்பு வெளியிடப்படும்.

பிற சிறுபான்மை பயங்கரவாத நடவடிக்கைகளை விரிவாக பேசி துவேசம் பரப்ப பாசிஸ்டு ஊடகங்கள் இருக்கின்ற காரணத்தாலும், வேறு வெகுசன முதாலளித்துவ ஊடகங்கள் இந்த அம்சத்தில் விவாதத்தை முன்னெடுத்து சென்று மக்களிடம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி வருவதாலும் அவற்றிற்கு இங்கு முக்கியத்துவம் தேவைப்பட்டால் ஒழிய அளிக்கப்படாது.

Terrorfocus